தமிழகத்தில் பெண்கள் - நாகசாமி

பொது வாழ்வில் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கின்றது என்பதை பற்றி தனது கருத்துக்களைச் சொல்வதாக இந்த பேட்டி ஆரம்பிக்கின்றது. அதிலிருந்து அரசர்களின் காலத்திற்குச் செல்கின்றார் முனைவர்.நாகசாமி.

இராஜராஜனின் தலைமை தேவியான லோகமகாதேவி தஞ்சாவூரில் இராஜராஜன் பெருங்கோயிலை கோயிலைக் கட்டிமுடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பெயரிலேயே லோகமகாதேவீச்வரம் என்ற கோயிலை கட்டி அதற்கு தனது பெயரையே சூட்டியிருக்கின்றார்.

திருவையாற்றிலே அவர் பெயரால் இந்தக் கோயில் கட்டியிருக்கின்றார். அதற்கு லோகமகாதேவீச்வரம் என்று பெயரும் சூட்டியிருக்கின்றார். இது அரசன் கட்டியதல்ல. மாறாக அரசியே கட்டியது. அந்தக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதற்குச் சான்றாக அமைந்திருக்கின்றது. "திருவையாற்றுப்பால் நாமெடுப்பித்த லோகமகாதேவிச்வரமுடையாருக்கு நாம் கொடுத்தன கல்லில் வெட்டு" என்ற அரசியே ஆணையிட்டுக் கொடுத்தது குறிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பொதுவாக கோயில்களில் அதிகாரிகளாகவும் தலைமை அதிகாரியாகவும் இருப்பவர்கள் ஆண்கள். ஆனால் அந்தக் கோயிலிலே தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் ஒரு பெண். குஞ்சரமல்லி என்று அவருக்கு பெயர். அவருக்குக் கீழே பணி புரிந்தோர் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும். குஞ்சரமல்லியிடம் ஆணை பெற்றுக் கொண்டு பணி புரிந்திருக்கின்றனர் என்ற இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது என்று குறிப்பிடுகின்றார்.

சோழர் காலத்திலே, குந்தவை பிராட்டியார் வணிகம் நடக்கும் இடத்தில் அதாவது ஏலம் போடுகின்ற இடத்திலே தனியாக நின்று அவர் வணிகம் பேசியதையும் இவர் குறிப்பிடுகின்றார்.

அதனால் பெண்கள் அதிகாரிகளாக இருந்தமைக்கானச் சான்றுகள் இருக்கின்றன என்று இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.
பெண்கள் அரசிகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கின்ரார்களா என்பதற்கும் சில உதாரணங்கள் வருகின்றன இந்தப் பேட்டியில். ஆண்கள் அரசாட்சி செய்த போது என்னென்ன அதிகாரங்களெல்லாம் கொடுக்கபப்ட்டிருந்தனவோ அத்தனை அதிகாரங்களும் பெற்று பெண் அரசியர் ஆட்சி செய்திருக்கின்றனர். மதுரையில் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ராணி மங்கம்மாள் தனி அரசியாக இருந்திருக்கின்றார். அவளது காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த ராணியின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதன் மேல் தெலுங்கிலும் தமிழிலும் மஹாராஜராஜ ஸ்ரீ ராணி மங்கம்மா என்று குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது .

அவருக்குப் பின்னர் வந்தவர் மீனாட்சி. முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கன் என்பரின் மனைவி. இவர் தனியாட்சி புரிந்திருக்கின்றார் என்றும் குறிப்பிடுகின்றார்.

பெண்கள் தனியாட்சி செய்தவர்களாக, வணிகம் செய்தவர்களாக, அதிகாரிகளாக தங்கள் பெயரிலேயே தானம் செய்தவர்களாக, அரசனுக்குரிய சம உரிமை உடையவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்றார்.

தனது பேச்சினைப் பாரதியின் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவொம் என்று கூறி முடிக்கின்றார். கேட்டுப் பாருங்கள்.





-:தமிழகத்தில் பெண்கள்


பேட்டி கண்டவர்: சுபாஷினி .

1 comments:

South Indian ancient history prior to Tamil Sangam | April 12, 2019 at 10:08 AM

The article about independence to women in the south indian history is seems to be very proud. From this collection it seems that the British has created or written their own history without taking into account of the functions of women in the society in the tamil kingdoms. It is very unfortunate to note that the successive government blindly and madly followed the history written by the British and even today the central government has come forward to unearth the true history of the south indian kingdoms that were existed for several decades and their achievement in ocean travel and their business with the middle east and gulf regions is so impressing and it is a historical proof as to why the British and there after Muslims were Invaded into India is to be relooked deeply and a true history bringing about the truth of the Tamilians before 1 BCE is absolutely necessary.
Thanks,
P.S. Kannan,
Tahsildar (Rtd)

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness