களப்பிரர் காலம் பகுதி 4

courtesy: National Geographic
களப்பிரர் கால ஆய்வுத் தகவல்களை பதியும் ஒரு முயற்சி இது. இத்தொடரில் இதுவரை 5 ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று மேலும் 2 பதிவுகளை வெளியிடுகின்றேன்.

பதிவு 6

இப்பதிவு தமிழ் நாட்டில் பௌத்த ஆலயங்கள் பற்றிய கள ஆய்வுத் தகவலைத் தருவதாக அமைகின்றது.

- தமிழ்நட்டில் தற்சமயம் எந்த முழுமையான பௌத்த கோயில்களும் இல்லை. பூம்புகாரில் நிகழ்த்திய தொல்லியல் துறையினரின் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு பௌத்த கோயில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- கோயில் மட்டுமன்றி பௌத்த சிற்பங்கள் இவ்வகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. கடலில் மூழ்கிப்போன சிலைகளும் கிடைத்திருக்கின்றன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்த பல பௌத்த ஆலயங்களைப் பற்றி யுவான் சுவான் தனது குறிப்புக்களில் எழுதி வைத்திருக்கும் தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன.
- சைவ சமயம் அப்பர் சம்பந்தர் காலத்தில் செழிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் பௌத்த சமண மதங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தன.
மீண்டும் 12ம் 13ம் நூற்றாண்டில் பௌத்தம் எழுச்சி பெற்றதற்கானச் சான்றுகள் கிடைக்கின்றன.
- அப்பர் சம்பந்தர் காலத்தில் எழுச்சி கொண்டு வந்த சைவம் போல மீண்டும் வீரமிக்க ஒரு சைவம் தேவைப்பட்டது. பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் 63 நாயன்மார்களில் பலர் மிகத் தீவிரமான சைவ பக்தர்கள். அவர்கள் பற்றிய குறிப்புகள்...
- காபாலிகம் வீர சைவம் ஆகியவற்றின் தாக்கம், அவற்றின் எழுச்சி தோன்றிய போது பௌத்த சமண கோயில்கள் அழிக்கப்பட்டு அங்கே சைவம் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது

பதிவு 7

இப்பதிவு மணிமேகலையின் காலம் மற்றும் இந்திரன் எனும் தெய்வம் பற்றியதாக அமைகின்றது

- சங்கம் மருவிய காலமான 6ம் நூற்றாண்டுக்கு முன்னர்
- கிபி.2ம் நூற்றாண்டு வாக்கிலேயே காஞ்சிபுரத்திலிருந்து வணிகர்கள் சீனா மற்றும் பிற கிழக்கிந்திய நாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்கள்
- காமகோட்டம் என்ற இடத்தில் பௌத்த சமய தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்திற்கு சோழ மண்ணன் கோயில் கட்டியிருக்கின்றார்
- மணிமேகலை அக்கால கட்டத்தில் கரூர் போன்ற பல இடங்களுக்குச் சென்று சமய தர்க்கங்கள் செய்து பௌத்தத்தை நிலை நிறுத்தியிருக்கின்றார்.
- மணிமேகலா தெய்வம் பற்றிய குறிப்புக்கள்
- மணிமேகலா கடல் தெய்வம்
- தனது மகளுக்கு கோவலன் மணிமேகலா எனப் பெயர் சூட்டுவதற்கான காரணம்
- பௌத்த கல்வெட்டுக்களில் அறச்சாலை எனும் சொற்பிரயோகம்.. தானங்கள், உணவுச் சாலைகள்
- சைவத்தில் உள்ள அன்னப்பூரணி எனும் தெய்வம்
- கல்வெட்டுக்கள் தரும் தகவல்கள்
- இந்திர வழிபாடும் பௌத்த சமயத்தில்
- இந்திரன் முக்கிய தெய்வமாக இருந்து பின்னர் முக்கியத்துவம் குறைதல்
- இந்திர விழா


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness