சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் - பேட்டி

தமிழ்நாடன்



-ஆசிரியர், கவிஞர், ஓவியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர்..
-சேலத்தில் அருங்காட்சியகம் அமைத்திட அடிப்படைப் பணிகள் நடத்திய சேலம் ஓவியர்-எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர் (1975)
-தமிழ்நாட்டு அரசின் வரலாற்று ஆவண ஆய்வுக் குழு மண்டல உறுப்பினர். அதன் சேலம் கிளை மாவட்ட ஆட்சியரைப் பதிப்பாளராகக் கொண்டு நடத்தும் வரலாற்று ஆவண செய்தி மடல் ஆசிரியர் (1985 - ).
-சேலம் ஆவணக் காப்பகம் அலுவலகம் வரக் காரணர்களில் ஒருவர்
-கொல்லிமலை ஓரிவிழா காலங்களில் நாமக்கல் மகளிர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு வரலாற்று ஆய்வரங்குகள் நடத்தியவர் (1985, 1986)
-தமிழ்நாடு அரசு நடத்திய கண்காட்சியில் (சென்னை தீவுத்திடல்) சேலம் மாவட்டம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் (1985 - 90) முதற்பரிசு பெற உழைத்த வல்லுநர் குழுவினர்.
-வரலாற்று மூலங்கள் பாதுகாத்தல், அதைக் கற்பித்தல் என சிறப்புப் பயிற்சி பெற்றவர் (மைய அரசுப் பண்பாட்டுத் துறை). சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்க்கு இத்தகு முகாம்கள் பல நடத்தியவர்.
-தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர்
-கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர்.
-பாவேந்தரின் படைப்பான குமரகுருபரன் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000).
-சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர்.
-தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர். (1995)
-கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980 - ).
-கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுனர்.அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர்.
-தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின் முன்னவர்
-கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர்.

அத்துடன்

-பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர்
-புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர்
கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர்.ராசுவுடன் இணைந்து பணியாற்றியவர்.
-சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
-தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்
-கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்
-தனது மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்.

தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்:

-தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010)
-வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் *பரமத்தி வேலூர்) (1995)
-பரமத்தி அப்பாவு (1800 இல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு)
-சேலம் : கலையும் இலக்கியமும் (1995)
-சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)
-கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
-2000 yeas of Salem (1976)
-The Story of India Indra 1975
-அன்புள்ளம் அருணாசலம் 2005
-சேலம் மையப்புள்ளி 2010

தொகுத்த நூல்கள்
-South Indian Studies (1981)
-சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988)
-தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)
-தமிழ்னாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
-தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
-கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008)

மேலும் பல இலக்கிய, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார்.


இவரது ஒலிப்பதிவு பேட்டி !

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness