குன்றக்குடி ஆதீனத்தில்

வணக்கம்,

மார்ச் மாத மண்ணின் குரல் பதிவுகளில் இன்று மேலும் ஒரு பதிவு இணைகின்றது.

குன்றக்குடி அடிகளாரை சந்தித்தபோது பதிவு செய்த அவருடைய பேட்டி ஒன்றினை ஜனவரி மாதம் வெளியீட்டில் இணைத்திருந்தேன். அதன் தொடர்ச்சி இம்மாதமும் தொடர்கின்றது. இறுதிப் பகுதி இது.

இப்பதிவில்

-குன்றக்குடி மடம் 1990க்கு முன்னர் தெய்வீகப் பேரவை, அருள் நெறித் திருகூட்டம் எனும் அமைப்புக்களை உருவாக்கி திருமுறை திருவாசகம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி செய்தது.
-இதற்குப் பிறகு காரைக்குடியில் அரசின் சில நிறுவன அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு பொது மக்கள் பயன்படும் வகையில் ஆய்வு, தொழில், வேளாண்மை உற்பத்தி என்ற வகையில் சமூகப் பணிகளில் மடம் இறங்கியது
-சிவகங்கை மாவட்ட அளவில் குன்றக்குடி மடத்தின் வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. ஏறக்குறைய 20 அமைப்புக்கள் பொதுமக்கள் உயர் கல்வி பெற்றிராத போதும் பல்வேறு தொழில்கல்வி கற்று வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகுத்துக் கொடுக்கின்றது.
-இயற்கை சூழல், கோயில் அமைப்புகள் பற்றியும், கோயிலைச் சுற்றியுள்ள மருதாபுரி குளம், வையாபுரி குளம் பற்றிய தகவல்கள்
-குளங்கள் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் மடத்தின் செயல்பாடுகள்
-தமிழ் வழிக் கல்வி
என்பது பற்றி குன்றக்குடி அடிகளார் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

மேலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்கள் முனைவர் வள்ளி, டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.காளைராசன், சுபா  ஆகியோர் அடிகளாருடனும் மடத்தின் புலவர் திரு.பாலகுரு அவர்களுடனும் நிகழ்த்திய பொதுவான ஒரு கலந்துரையாடலின் பதிவையும் இவ்வொலிப்பதிவில் கேட்கலாம்.




இப்பதிவைக் கேட்க

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comments:

SETHUPANTHANAM | June 17, 2012 at 5:08 AM

தாங்கள் பகுதி பார்த்தேன்.நல்ல முயற்சி. பாராட்டு. மடத்தின் புலவர் பாலகுரு என்று இருக்கிறது. அவர் பெயர் மரு.பரமகுரு. திருத்தம் செய்து கொள்ளவும்.
சேதுபதி

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness