ஈரோடு கலைமகள் பள்ளிக்கூடத்தில் தொல்லியல் அருங்காட்சியகம்


புலவர் இராசு


கொடுமணல் ஆய்வு பற்றிய ஒரு அறிமுகத்துடன் இந்தப் பதிவு தொடங்குகின்றது.

கலைமகள் பள்ளியின் தண்ணீர் தேவைக்காக மணலைத் தோண்டிய போது ஒரு முதுமக்கள் தாழி கிடைத்திருக்கின்றது. தமிழக தொல்லியல் ஆய்வுகளிலேயே ஒரு புதுமையைப் படைத்த ஒரு கண்டுபிடிப்பாக இது கருதப்படுகின்றது. 2ம் நூற்றாண்டினைச் சார்ந்ததாக இந்த முதுமக்கள் தாழி பதிவு செய்யபப்ட்டிருக்கின்றது. பொதுவாக முதுமக்கள் தாழியில் இறந்தவர்களின் எறிக்கப்பட்ட உடலின் மிச்சங்கள் வைக்கப்பட்டு புதைக்கப்படுவது வழக்கம். இந்த பானைக்குள் இரண்டு எலும்புக்கூடுகள் வைக்கப்பட்டிருந்தது. ஒன்று ஒரு ஆணின் உடல் என்பதும் மற்றொன்று ஒரு பெண்ணின் உடல் என்பதும் ஆய்வில் கண்டு அறியப்பட்டது.

இந்த முதுமக்கள் தாழி கலைமகள் பள்ளிக்கூடத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.




ஒரு பள்ளியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்திருக்குமா என்றால் அதற்கு இந்தப் பள்ளிக்கூடம் சான்றாக மைந்திருக்கின்றது. கல்வெட்டுக்கள், சிற்பங்கள் என்பனவற்றோடு எலும்புக்கூடு உள்ளே வைக்கப்பட்ட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த முதுமக்கள் தாழி இந்தக் காட்சிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கூடத்தில் அகில இந்திய கல்வெட்டாய்வாளர்கள் கழகத்தினர் ஏற்பாட்டில் ஒரு கல்வெட்டு ஆய்வு மானாடு நடைபெற்றுள்ளது. இந்த மானாட்டை ஒட்டி ஒரு கல்வெட்டு ஆய்வு மலரும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்தப் பதிவினை புலவர் ராசுவின் இல்லத்திலிருந்து கலைமகள் பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள தொல்பொருள் காட்சியகத்திற்குச் செல்லும் வழியில் பதிவு செய்தேன். வாகனத்தில் செல்லும் போதே பதிவு செய்ப்பட்ட ஒரு ஒலிப்பதிவு.

ஒலிப்பதிவினைக் கேட்க!அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness