யாதவர் குலக் கண்ணன்


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் சென்று அங்கே  மலைப் பாறைகளில் கண்ட சித்திரங்களைப் பதிந்து குடைவரைக் கோயிலை பார்த்து விட்டு வரும்போது அங்கே குழுவாக வந்திருந்த யாதவர் குல மக்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. 

திருமலை பாறை சித்திரங்களையும் சமணப்படுகைகள் உள்ள இடங்களையும் அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அறிவித்து பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து விட்டு காவல் துறையினர் வருவதற்காகக் காத்திருந்த அவர்களுக்கு எங்களின் வருகை அங்கே ஆச்சரியம்.


பேசிக் கொண்டிருந்த போது வயதில் மூத்தவர் ஒருவர் -  அவர் பெயர் ஆதினமிளகி. தாங்கள் யாதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கள் குலதெய்வம் மகாவிஷ்ணு என்றும் கூறி விளக்கம் அளித்தார்.


விளக்கத்தின் போதே ஒரு குலப் பாடலையும் சொல்ல ஆரம்பிக்க அதனை வீடியோ பதிவாகவும் ஒலிப்பதிவாகவும் செய்திருந்தேன். அப்பதிவுகளை இன்று வெளியிடுகின்றேன். 


  • வீடியோ பதிவினைக் காண இங்கே செல்க: http://video-thf.blogspot.de/2013/01/blog-post.html
  • யூடியூபில் : இங்கே

ஒலிப்பதிவுகள் மண்ணின் குரலில் இங்கே:
பதிவு 1:  யாதவர் குலம்,  மகாவிஷ்ணு சார்ந்தவகையிலேயே தங்கள் பெயரிலேயே அனைவருக்கும் பெயர் வைக்கப்படுகின்றது என்பதை விளக்குகின்றார்.

பதிவு 2: கோயிலில் இருக்கும் ஒரு ஆத்தி மரம் பற்றி சொல்ல ஆரம்பித்து தங்கள் குலக்கடவுள் கண்ணனைப் பற்றி பாடுகின்றார்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comments:

Unknown | January 17, 2017 at 12:01 PM

Best Yadavar Matrimony in tamilnadu visit: Yadavar matrimony

Best Yadavar matrimony in tamilnadu visit: யாதவர் தி௫மண தகவல் மையம்

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness