ஈரோடு கலைமகள் பள்ளிக்கூடத்தில் தொல்லியல் அருங்காட்சியகம்


புலவர் இராசு


கொடுமணல் ஆய்வு பற்றிய ஒரு அறிமுகத்துடன் இந்தப் பதிவு தொடங்குகின்றது.

கலைமகள் பள்ளியின் தண்ணீர் தேவைக்காக மணலைத் தோண்டிய போது ஒரு முதுமக்கள் தாழி கிடைத்திருக்கின்றது. தமிழக தொல்லியல் ஆய்வுகளிலேயே ஒரு புதுமையைப் படைத்த ஒரு கண்டுபிடிப்பாக இது கருதப்படுகின்றது. 2ம் நூற்றாண்டினைச் சார்ந்ததாக இந்த முதுமக்கள் தாழி பதிவு செய்யபப்ட்டிருக்கின்றது. பொதுவாக முதுமக்கள் தாழியில் இறந்தவர்களின் எறிக்கப்பட்ட உடலின் மிச்சங்கள் வைக்கப்பட்டு புதைக்கப்படுவது வழக்கம். இந்த பானைக்குள் இரண்டு எலும்புக்கூடுகள் வைக்கப்பட்டிருந்தது. ஒன்று ஒரு ஆணின் உடல் என்பதும் மற்றொன்று ஒரு பெண்ணின் உடல் என்பதும் ஆய்வில் கண்டு அறியப்பட்டது.

இந்த முதுமக்கள் தாழி கலைமகள் பள்ளிக்கூடத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.




ஒரு பள்ளியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்திருக்குமா என்றால் அதற்கு இந்தப் பள்ளிக்கூடம் சான்றாக மைந்திருக்கின்றது. கல்வெட்டுக்கள், சிற்பங்கள் என்பனவற்றோடு எலும்புக்கூடு உள்ளே வைக்கப்பட்ட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த முதுமக்கள் தாழி இந்தக் காட்சிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கூடத்தில் அகில இந்திய கல்வெட்டாய்வாளர்கள் கழகத்தினர் ஏற்பாட்டில் ஒரு கல்வெட்டு ஆய்வு மானாடு நடைபெற்றுள்ளது. இந்த மானாட்டை ஒட்டி ஒரு கல்வெட்டு ஆய்வு மலரும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்தப் பதிவினை புலவர் ராசுவின் இல்லத்திலிருந்து கலைமகள் பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள தொல்பொருள் காட்சியகத்திற்குச் செல்லும் வழியில் பதிவு செய்தேன். வாகனத்தில் செல்லும் போதே பதிவு செய்ப்பட்ட ஒரு ஒலிப்பதிவு.

ஒலிப்பதிவினைக் கேட்க!அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

குன்றக்குடி ஆதீனத்தில்

வணக்கம்,

மார்ச் மாத மண்ணின் குரல் பதிவுகளில் இன்று மேலும் ஒரு பதிவு இணைகின்றது.

குன்றக்குடி அடிகளாரை சந்தித்தபோது பதிவு செய்த அவருடைய பேட்டி ஒன்றினை ஜனவரி மாதம் வெளியீட்டில் இணைத்திருந்தேன். அதன் தொடர்ச்சி இம்மாதமும் தொடர்கின்றது. இறுதிப் பகுதி இது.

இப்பதிவில்

-குன்றக்குடி மடம் 1990க்கு முன்னர் தெய்வீகப் பேரவை, அருள் நெறித் திருகூட்டம் எனும் அமைப்புக்களை உருவாக்கி திருமுறை திருவாசகம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி செய்தது.
-இதற்குப் பிறகு காரைக்குடியில் அரசின் சில நிறுவன அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு பொது மக்கள் பயன்படும் வகையில் ஆய்வு, தொழில், வேளாண்மை உற்பத்தி என்ற வகையில் சமூகப் பணிகளில் மடம் இறங்கியது
-சிவகங்கை மாவட்ட அளவில் குன்றக்குடி மடத்தின் வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. ஏறக்குறைய 20 அமைப்புக்கள் பொதுமக்கள் உயர் கல்வி பெற்றிராத போதும் பல்வேறு தொழில்கல்வி கற்று வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகுத்துக் கொடுக்கின்றது.
-இயற்கை சூழல், கோயில் அமைப்புகள் பற்றியும், கோயிலைச் சுற்றியுள்ள மருதாபுரி குளம், வையாபுரி குளம் பற்றிய தகவல்கள்
-குளங்கள் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் மடத்தின் செயல்பாடுகள்
-தமிழ் வழிக் கல்வி
என்பது பற்றி குன்றக்குடி அடிகளார் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

மேலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்கள் முனைவர் வள்ளி, டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.காளைராசன், சுபா  ஆகியோர் அடிகளாருடனும் மடத்தின் புலவர் திரு.பாலகுரு அவர்களுடனும் நிகழ்த்திய பொதுவான ஒரு கலந்துரையாடலின் பதிவையும் இவ்வொலிப்பதிவில் கேட்கலாம்.




இப்பதிவைக் கேட்க

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் - பேட்டி

தமிழ்நாடன்



-ஆசிரியர், கவிஞர், ஓவியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர்..
-சேலத்தில் அருங்காட்சியகம் அமைத்திட அடிப்படைப் பணிகள் நடத்திய சேலம் ஓவியர்-எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர் (1975)
-தமிழ்நாட்டு அரசின் வரலாற்று ஆவண ஆய்வுக் குழு மண்டல உறுப்பினர். அதன் சேலம் கிளை மாவட்ட ஆட்சியரைப் பதிப்பாளராகக் கொண்டு நடத்தும் வரலாற்று ஆவண செய்தி மடல் ஆசிரியர் (1985 - ).
-சேலம் ஆவணக் காப்பகம் அலுவலகம் வரக் காரணர்களில் ஒருவர்
-கொல்லிமலை ஓரிவிழா காலங்களில் நாமக்கல் மகளிர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு வரலாற்று ஆய்வரங்குகள் நடத்தியவர் (1985, 1986)
-தமிழ்நாடு அரசு நடத்திய கண்காட்சியில் (சென்னை தீவுத்திடல்) சேலம் மாவட்டம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் (1985 - 90) முதற்பரிசு பெற உழைத்த வல்லுநர் குழுவினர்.
-வரலாற்று மூலங்கள் பாதுகாத்தல், அதைக் கற்பித்தல் என சிறப்புப் பயிற்சி பெற்றவர் (மைய அரசுப் பண்பாட்டுத் துறை). சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்க்கு இத்தகு முகாம்கள் பல நடத்தியவர்.
-தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர்
-கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர்.
-பாவேந்தரின் படைப்பான குமரகுருபரன் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000).
-சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர்.
-தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர். (1995)
-கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980 - ).
-கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுனர்.அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர்.
-தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின் முன்னவர்
-கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர்.

அத்துடன்

-பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர்
-புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர்
கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர்.ராசுவுடன் இணைந்து பணியாற்றியவர்.
-சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
-தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்
-கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்
-தனது மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்.

தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்:

-தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010)
-வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் *பரமத்தி வேலூர்) (1995)
-பரமத்தி அப்பாவு (1800 இல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு)
-சேலம் : கலையும் இலக்கியமும் (1995)
-சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)
-கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
-2000 yeas of Salem (1976)
-The Story of India Indra 1975
-அன்புள்ளம் அருணாசலம் 2005
-சேலம் மையப்புள்ளி 2010

தொகுத்த நூல்கள்
-South Indian Studies (1981)
-சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988)
-தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)
-தமிழ்னாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
-தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
-கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008)

மேலும் பல இலக்கிய, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார்.


இவரது ஒலிப்பதிவு பேட்டி !

களப்பிரர் காலம் பகுதி 4

courtesy: National Geographic
களப்பிரர் கால ஆய்வுத் தகவல்களை பதியும் ஒரு முயற்சி இது. இத்தொடரில் இதுவரை 5 ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று மேலும் 2 பதிவுகளை வெளியிடுகின்றேன்.

பதிவு 6

இப்பதிவு தமிழ் நாட்டில் பௌத்த ஆலயங்கள் பற்றிய கள ஆய்வுத் தகவலைத் தருவதாக அமைகின்றது.

- தமிழ்நட்டில் தற்சமயம் எந்த முழுமையான பௌத்த கோயில்களும் இல்லை. பூம்புகாரில் நிகழ்த்திய தொல்லியல் துறையினரின் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு பௌத்த கோயில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- கோயில் மட்டுமன்றி பௌத்த சிற்பங்கள் இவ்வகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. கடலில் மூழ்கிப்போன சிலைகளும் கிடைத்திருக்கின்றன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்த பல பௌத்த ஆலயங்களைப் பற்றி யுவான் சுவான் தனது குறிப்புக்களில் எழுதி வைத்திருக்கும் தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன.
- சைவ சமயம் அப்பர் சம்பந்தர் காலத்தில் செழிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் பௌத்த சமண மதங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தன.
மீண்டும் 12ம் 13ம் நூற்றாண்டில் பௌத்தம் எழுச்சி பெற்றதற்கானச் சான்றுகள் கிடைக்கின்றன.
- அப்பர் சம்பந்தர் காலத்தில் எழுச்சி கொண்டு வந்த சைவம் போல மீண்டும் வீரமிக்க ஒரு சைவம் தேவைப்பட்டது. பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் 63 நாயன்மார்களில் பலர் மிகத் தீவிரமான சைவ பக்தர்கள். அவர்கள் பற்றிய குறிப்புகள்...
- காபாலிகம் வீர சைவம் ஆகியவற்றின் தாக்கம், அவற்றின் எழுச்சி தோன்றிய போது பௌத்த சமண கோயில்கள் அழிக்கப்பட்டு அங்கே சைவம் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது

பதிவு 7

இப்பதிவு மணிமேகலையின் காலம் மற்றும் இந்திரன் எனும் தெய்வம் பற்றியதாக அமைகின்றது

- சங்கம் மருவிய காலமான 6ம் நூற்றாண்டுக்கு முன்னர்
- கிபி.2ம் நூற்றாண்டு வாக்கிலேயே காஞ்சிபுரத்திலிருந்து வணிகர்கள் சீனா மற்றும் பிற கிழக்கிந்திய நாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்கள்
- காமகோட்டம் என்ற இடத்தில் பௌத்த சமய தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்திற்கு சோழ மண்ணன் கோயில் கட்டியிருக்கின்றார்
- மணிமேகலை அக்கால கட்டத்தில் கரூர் போன்ற பல இடங்களுக்குச் சென்று சமய தர்க்கங்கள் செய்து பௌத்தத்தை நிலை நிறுத்தியிருக்கின்றார்.
- மணிமேகலா தெய்வம் பற்றிய குறிப்புக்கள்
- மணிமேகலா கடல் தெய்வம்
- தனது மகளுக்கு கோவலன் மணிமேகலா எனப் பெயர் சூட்டுவதற்கான காரணம்
- பௌத்த கல்வெட்டுக்களில் அறச்சாலை எனும் சொற்பிரயோகம்.. தானங்கள், உணவுச் சாலைகள்
- சைவத்தில் உள்ள அன்னப்பூரணி எனும் தெய்வம்
- கல்வெட்டுக்கள் தரும் தகவல்கள்
- இந்திர வழிபாடும் பௌத்த சமயத்தில்
- இந்திரன் முக்கிய தெய்வமாக இருந்து பின்னர் முக்கியத்துவம் குறைதல்
- இந்திர விழா


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness