கூத்து பட்டறை முத்துசாமி

Thursday, March 11, 2010




தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் நவீன காலத்தில் நகர மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரும் பங்காற்றியவர்.


பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.மாலன், திரு.நரசய்யா, திருமதி.சுபாஷினி ட்ரெம்மல்







-:பகுதி 1

-:பகுதி 2

-:பகுதி 3

-:பகுதி 4

-:பகுதி 5

-:பகுதி 6

-:பகுதி 7

-:பகுதி 8


பேட்டி ஒலிப்பதிவு: சுபாஷினி ட்ரெம்மல்.

சிலை மீட்ட செம்மல் - முனைவர்.நாகசாமி

Saturday, February 20, 2010

ஒரு தெய்வச் சிலை எவ்வாறு தமிழகத்திலிருந்து பலவாறு கை மாறி அயல் நாடுகளின் மியூசியங்களை அலங்கரிக்கின்றன என்பதை இந்த பேட்டி விளக்குகின்றது. ஸ்கோட்லண்ட் யார்ட் காவல் துறை ஈடுபட்டு அவர்களோடு தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி அவர்களுடைய ஆய்வுத் திறமையினால் எவ்வாறு லண்டன் மியூசியத்திலிருந்து இந்த சிலை இந்தியாவிற்கு திர்ரும்பியது என்பதை ஒரு சுவாரசியமான நாவலப் படிப்பது போல விளக்குவதைக் கேட்கலாம்.






-:சிலை மீட்ட செம்மல்


பேட்டி கண்டவர்: சுபாஷினி ட்ரெம்மல்.

வேர்களைத் தேடி - எஸ்.பாலசுப்ரமணியம் B+

கடல் வழி ஆய்வும் குமரிக் கண்ட வாலாறும் பற்றிய தனது ஆய்வுகளை எஸ்.பாலசுப்ரமணியம் B+ பகிர்ந்து கொள்கின்றார். வேர்களைத் தேடி இவர் மேற்கொள்ளும் முயற்சிகளை அறிமுகப்படுத்தும் பதிவாக இது அமைகின்றது.





-:வேர்களைத் தேடி


பேட்டி கண்டவர்: சுபாஷினி ட்ரெம்மல்.

நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும் - நெல்லை நெடுமாறன்

7-2-2010 அன்று சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் காலை பத்துமணிக்கு நடைபெற்ற
"நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்" என்கிற தலைப்பில் நெல்லை நெடுமாறன் ஆற்றிய உரையின் பதிவு இது.

-: நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்



பதிவு செய்து அனுப்பியவர்:யுகமாயினி சித்தன்.

பாரதியார் பாடல்கள்

Friday, January 29, 2010




-பாடல் 1: போராடக் கற்றுத் தந்தவர் யாரிங்கே?

-பாடல் 2: பச்சை மரகதப் பட்டு விரித்து படுத்து கிடக்குது இயற்கை

-பாடல் 3: மலையைக் குடைந்தெடுத்து

-பாடல் 4: கும்பிகளே ஓடிவந்து

-பாடல் 5: எட்டயபுரத்தானுக்கு


இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக சேகரித்து வழங்கியவர் திரு.ஆண்டோ பீட்டர்.

சங்கமம் 2010 நித்யஸ்ரீ பாடல்கள்

Thursday, January 28, 2010





-பாடல் 1: உன்னைக் காண கண் கோடி வேண்டும்

-பாடல் 2: எங்கள் நாட்டுகெந்த நாடு ஈடு

-பாடல் 3: களைப்படைந்தால்

-பாடல் 4: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

-பாடல் 5: குறை ஒன்றும் இல்லை

-பாடல் 6: ஜனனி ஜனனி

-பாடல் 7: சாந்தி நிலவ வேண்டும்


இப்பாடல்களை ஒலிப்பதிவு செய்து வழங்கியவர்.திரு.சந்திரசேகரன்.

கிறிஸ்மஸ் விழா

Thursday, December 24, 2009


திருமதி.ஸ்டெல்லா




கிறிஸ்மஸ் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் திருமதி ஸ்டெல்லா எவ்வேறு தமிழகத்தில் கிறிஸ்மஸ் விழா இந்திய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுகின்றது என்று விவரிக்கின்றார். நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் துணைவியார் இவர். இவர் இதுவரை 5 சமையல் கலை நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென்பகுதியான முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது சூழலில் எவ்வாறு கிறிஸ்மஸ் மற்றும் ஏனைய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என் மிகத் தெளிவாக விவரிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்


முனைவர்.மோஸஸ்




தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அல்லது நல்லை கவிராயர், சுவிஷேடக் கவிராயர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் தமிழறிஞர் முனைவர்.மோசஸ். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் நூல்களில் பல பெரும்பாலும் செய்யுள் வடிவம் கொண்டவை. -பெரும்பாலும் ஏசு பெருமானைப் பற்றிய பாடல்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டவை. 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். இதில் ஏறக்குறைய 10 நூல்களே இன்று நூல் வடிவில் கிடைக்கின்றன. பல நூல்கள் கையெழுத்துப் படிகளாக உள்ளன; இன்னமும் அச்சு வடிவம் பெற வில்லை. இவரது நூல்களான பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், ஞான தச்சன் நாடகம் போன்றவை அச்சு வடிவில் வந்து புகழ்பெற்ற நூல்கள். இவரது நூல்கள் மின்பதிப்பாக்கம் பெற வேண்டும் முனைவர்.மோஸஸ் இந்த பதிவில் விண்ணப்பிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

Workshop on Digital Preservation of Tamil Heritage Materials

Tuesday, December 8, 2009


வருகையாளர்களில் சிலர்



தமிழ் மரபு அறக்கட்டளையும் கணித்தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய கணித்தமிழ் பயிற்சிப்பட்டறை டிசம்பர் 6 தேதி சென்னையில் நடந்தது. அது போது பேராளர்கள் நிகழ்த்திய உரையின் ஒலிவடிவம் கேட்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குக:


திரு.மாலன், முனைவர்.ராஜேந்திரன், திரு.லேணா தமிழ்வாணன்




உரை 1: ஆண்டோ பீட்டர், செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 2: முனைவர் நா.கண்ணன், தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 3: சுபாஷினி டிரம்மல், துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 4: மாலன், இதழியலர், ஆசிரியர்
உரை 5: பேரா.இராஜேந்திரன், துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
உரை 6: லேனா.தமிழ்வாணன், ஆசிரியர் கல்கண்டு, பதிப்பாளர்


சிறப்பு செய்யப்படுபவர்கள்

சுத்தானந்த பாரதியார் பாடல்கள்

Sunday, November 22, 2009

கவியோகி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாடல்கள்:



-பகுதி 1: கவியோகியின் குரலில் விளக்கம்; கவியோகியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்திலும் தமிழிலும். இதனைக் கேட்க

-பகுதி 2: கவியோகி பாடல்கள்

-பகுதி 3: கவியோகி பாடல்கள்



இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக வழங்கியவர் கவியோகி அவர்களின் பேரன் திரு.சந்திரசேகர் அவர்கள்.