Workshop on Digital Preservation of Tamil Heritage Materials

Tuesday, December 8, 2009

தமிழ் மரபு அறக்கட்டளையும் கணித்தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய கணித்தமிழ் பயிற்சிப்பட்டறை டிசம்பர் 6 தேதி சென்னையில் நடந்தது. அது போது பேராளர்கள் நிகழ்த்திய உரையின் ஒலிவடிவம் கேட்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குக:

உரை 1: ஆண்டோ பீட்டர், செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 2: முனைவர் நா.கண்ணன், தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 3: சுபாஷினி டிரம்மல், துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 4: மாலன், இதழியலர், ஆசிரியர்
உரை 5: பேரா.இராஜேந்திரன், துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
உரை 6: லேனா.தமிழ்வாணன், ஆசிரியர் கல்கண்டு, பதிப்பாளர்

சுத்தானந்த பாரதியார் பாடல்கள்

Sunday, November 22, 2009

கவியோகி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாடல்கள்:



-பகுதி 1: கவியோகியின் குரலில் விளக்கம்; கவியோகியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்திலும் தமிழிலும். இதனைக் கேட்க

-பகுதி 2: கவியோகி பாடல்கள்

-பகுதி 3: கவியோகி பாடல்கள்



இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக வழங்கியவர் கவியோகி அவர்களின் பேரன் திரு.சந்திரசேகர் அவர்கள்.

ஆகஸ்டு யுகமாயினி இலக்கியக் கூடல்

யுகமாயினி ஆகஸ்டு மாத இலக்கியக் கூடலில் இடம்பெற்ற உரையாடல்களின் பதிவு இன்று இடம்பெறுகின்றது.



1.புதுச்சேரி நாகரத்ணம் கிருஷ்ணா அவர்களின் உணர்வுகள் மதிப்பீடுகள் என்ற தலைப்பில் உரை.

2.திரு.நாகூர் ரூமி வழங்கும் நூல் ஆய்வு: மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் நூல் ஆய்வு

3.இலக்கியக் கோட்பாடுகள் குறித்து பெரியவர்.எஸ்.பொ.அவர்களுடனான கலந்துரையாடல்



ஒலிப்பதிவைக் கேட்க

யுகமாயினி மேமாத இலக்கிய கூடல் பதிவுகள்

Thursday, October 15, 2009

10 - 05 - 09 அன்று மயிலாப்பூர் 'ஸ்ரீனிவாசசாஸ்திரி ஹால்' ல் நடைபெற்ற யுகமாயினி இலக்கியக் கூடல் பதிவுகள் இவை. இந்தப் பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அனுப்பியவர் யுகமாயினி சித்தன்.





இப்பகுதியில் இடம்பெறுபவை:

1. யுகமாயினி சித்தன் வழங்கும் அறிமுக உரை.


இலக்கிய கூட்டங்கள் தனித்தனியாக சிறிது சிறிதாக நடைபெற்று வருவதும், பல இலக்கிய கூடங்கள் இலக்கிய ஆர்வலர்களுக்குத் தேவையான விஷயங்களைத் தருவதில்லை என்ற தனது ஆதங்கத்தை விளக்கி அதனைப் போக்க தரமிக்க ஒரு இலக்கிய கூட்டத்தை மாதா மாதம் நடந்த வேண்டியதன் அவசியத்தை விவரிக்கிறார். அதோடு இக்கூட்டம் நடை பெறும் தன்மையினையும் விளக்குகின்றார். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!


2. கவிஞர் ரவி சுப்ரமணியன் புதுக்கவிதையும் இசையும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை). ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!



3. வெங்கட் தாயுமானவன் - 'ஜீவனென் கவிதை' என்ற தலைப்பில் மிக ஆர்வமாகத் தனது பணிகள் பற்றியும் மின்தமிழ் வழி தான் அறிமுகம் பெற்ற நண்பர்கள் பற்றியும் விவரிக்கின்றார். (குறிப்பு: ஆரம்பப்பகுதி பதிவில் இல்லை)ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!



4. ஆய்வாளர் "இன்று" திரு.சுவாமிநாதன் - தமிழில் 'அடிமையின் மீட்சி' ம.ந.ராமசாமி அவர்களது நூல் பற்றிய ஆய்வுரை வழங்குகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை) கேட்க இங்கே சுட்டுக!



பதிவுகளில் சில பகுதிகள் விடுபட்டிருந்தாலும் உரையின் பெரும்பாலான பகுதிகள் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த பேச்சுக்கள்.

கல்வெட்டுகளினால் அறியலாகும் வானசாஸ்திர குறிப்புகள்

Saturday, September 19, 2009

13 - 08 - 09 அன்று அடையாறு தமிழ்ச் சங்க மாதாந்திரக் கூட்டத்தில் திருமதி. மார்க்ஸீய காந்தி “ கல்வெட்டுகளினால் அறியலாகும் வானசாஸ்திர குறிப்புகள் “ என்கிற தலைப்பில் உரையாற்றியதின் ஒலிப்பதிவு இது. இதனை பதிவு செய்து அனுப்பியவர் யுகமாயினி சித்தன். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!

மரபுப் பெருநாள் உரை - நா.கண்ணன்

Sunday, August 30, 2009

தமிழ் மரபு அறக்கட்டளையின் 8ம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் (ஆகஸ்ட் 30, 2009) நா.கண்ணன் ஆற்றிய வரவேற்புரை.

இவ்வுரை கேட்க இங்கே சுட்டுக!

தீரர் சத்தியமூர்த்தி

Thursday, August 20, 2009

திரு.நரசய்யா

சுதந்திர போராட்ட வீரர், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 123வது பிறந்த நாள் நினைவு பகிர்வு.

பதிவினைக் கேட்க

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 3

Tuesday, August 18, 2009


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


3.கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா

ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை

Tuesday, July 21, 2009

திரு.நரசய்யா

ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை நூலாசிரியர் திரு.நரசய்யா தனது ஆய்வு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு உரை நிகழ்ச்சி இது.

ஒலிப்பதிவைக் கேட்க

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 17

Sunday, June 28, 2009



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 17 - போருக்குப் பின் இன்றைய இலங்கயில் தமிழர்களின் நிலை குறித்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை