தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: பகுதி 2-5

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியின் சில பகுதிகள் தொடர்கின்றன.





பகுதி 2
எவ்வாறு கல்வெட்டுக்களை ஆய்வு செய்வது என்ற தனது பேச்சினை தொடர்கின்றார். பல்லவர்கள், பாண்டியவர்கள் கட்டிய கோவில்களின் கட்டுமானம் எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்று விளக்கமும் வருகின்றது இப்பதிவில். நிறைய கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கும் போது எல்லாவற்றையும் ஒரேவரிசையில் படித்து விட முடியாது. மாறாக ஒவ்வொன்றாகப் படியெடுத்து பின்னர் அவை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு அவையனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்று தமது ஆய்வுப் பணிகள் பற்றி குறிப்பிடுகின்றார் இப்பகுதியில்.


பகுதி 3
தஞ்சாவூர் தவிர்த்து செங்கல்பட்டு, வட ஆற்காடு பகுதிகளில் இவரது பணிகள் தொடர்ந்திருக்கின்றன. பொது மக்கள் கூட சில வேளைகளில் அவர்கள் ஊரிலுள்ள கல்வெட்டுக்களை வாசித்து படியெடுக்க இந்த ஆய்வாளர்களைக் கேட்டுகொள்வார்களாம். பொது மக்களின் ஈடுபாட்டைப் பற்றி மகிழ்ச்சியுடன் விவரிக்கின்றார் இப்பகுதியில்.

நன்னிலம் வட்டக் கல்வெட்டுக்கள் என்ற மூன்று தொகுதிகளை முழுதாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். அதனைப் பற்றிய குறிப்பும் இப்பகுதியில் வருகின்றது.


பகுதி 4

திருவெள்ளிமழலை என்னும் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு ராஜராஜனின் கல்வெட்டுக்கள் மட்டுமே 108 கல்வெட்டுக்களுக்கும் மேல் உள்ளன என்று குறிப்பிடுகின்றார்.
கும்பகோணம் கல்வெட்டுக்கள், பாபனாசம் கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன.

பொது மக்களே இவர்களை அன்புடன் உபசரித்து இவர்களை வரவேற்பார்களாம். சைக்கிளில் செல்லும் இவர்களைப் பார்த்து முதலில் சர்க்கஸ் போட வந்தார்களா என்று கேட்பார்களாம். பின்னர் உண்மை விஷயம் அறிந்து கொண்ட பின்னர் பொது மக்களும் இவர்களை அன்புடன் உபசரித்து தாங்களும் இவர்களுக்கு ஏதாவது உதவ முடிந்த வகையில் உதவுவார்களாம். இவ்வகை சுவாரசியமான செய்திகளை இப்பகுதியில் பகிர்ந்து கொள்கின்றார்.


பகுதி 5
முன்னர் இவர்கள் காலத்தில் கல்வெட்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட விதத்திற்கும் தற்போது எவ்வாறு இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றும் இந்தப் பகுதியில் குறிப்பிடுகின்றார். முன்னர் இந்த ஆய்வாளர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வுகள் நிகழ்த்தியிருக்கின்றனர். தற்சமயம் அந்த அளவிற்கான் ஆர்வம் குறைந்திருப்பதாகவே இவர் தெரிவிக்கின்றார்.


கல்வெட்டு பயிற்சி நிறுவனத்தின் செயல்பாடுகள்.
தொல்லியல் துறை அறிஞர்.டாக்டர்.இரா.நாகசாமி இவரது வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். தமிழ் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபடுவது மேலும் சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு தொல்லியல் ஆய்வுத் துறையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்

தமிழிலக்கியத்துக்கும் கல்வெட்டுக்களுக்கும் தொல்லியல் ஆய்விற்கும் நல்ல தொடர்புபுள்ளது என்றும், கருவூர், மதுரை, பூம்புகார், தஞ்சை போன்ற இடங்கள் இலக்கிய பிரசித்தி பெற்றதனாலும் இங்கு பெரும்பாலும் ஆய்வுகள் தொடரப்படுவதற்கு காரணமாக் அமைகின்றன என்றும் இப்பகுதியில் நம்முடன் தகவல் பகிர்ந்து கொள்கின்றார்.

இப்பேட்டிகளை கேட்க:
-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி வெளியீடுகள்



1.விநாயகர் அகவல்





2010 தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த திரு. தமிழ்த்தேனி அவர்கள் ஆழ்கடலைவிட ஆழமான இந்த எளிய இலக்கியத்தை பதிவு செய்து அளித்துள்ளார். விநாயகர் அகவல், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சங்கப் புலவர்களுள் ஒருவரான, குழந்தை இலக்கியத்தில் புதுமை கண்ட ஔவைப்பாட்டி இயற்றியது. அது இயற்றப்பட்ட சூழ் நிலையையும் அழகாக விளக்கியிருக்கிறார் தமிழ்த்தேனியார். தமிழகத்தின் முழுமுதற் கடவுளின் அருட்பார்வை இந்த தீபாவளித் திருநாள் முதல் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்கட்டும்.



2. ஆத்திச்சூடி




ஔவை இயற்றிய பற்பல நூல்களில் முதன்மையானது ஆத்திச்சூடி. எளிமையான, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய சின்னஞ்சிறிய வாக்கியங்களாக அமைந்திருக்கும் இவ்விலக்கியம் 108 வாக்கியங்களைக் கொண்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் கற்றுப் பின்பற்ற வேண்டிய இந்த உரையை, 2010 தீபாவளிக்காக, நமக்காக தொகுத்தளிப்பவர், ஈரோட்டைச் சேர்ந்த திருமதி. பவள சங்கரி. குழந்தை இலக்கியமல்லவா! இயல்பான பேச்சு நடையில் அவர்களுக்காகவே இதை வெளியிட்டிருக்கிறார்.









3. இனிக்கும் இலக்கியம்: குழந்தை

நற்றிணைப்பாடல் பெங்களூரைச் திருமதி. ஷைலஜாவின் இலக்கிய ஆர்வம் நாம் நன்கு அறிந்ததே. அவர் தன் மனங்கவர்ந்த இலக்கியங்களை, ‘இனிக்கும் இலக்கியம்” என்று தொடராக வழங்குகிறார்”. 2010 தீபாவளிக்காக, இந்த இணைப்பில், குழந்தையைப் பற்றிய ஒரு நற்றிணைப் பாடலை விளக்குகிறார்.








4. இனிக்கும் இலக்கியம்: காதல்

முத்தொள்ளாயிரம் தமிழ் மரபில் வீரமும் காதலும் முக்கியத்துவம் பெற்றவை. தூய்மையான காதலைப்பற்றிய இலக்கியங்கள் அனேகம். தன் “இனிக்கும் இலக்கியம்” தொடரின் பகுதியாக, முத்தொள்ளாயிரத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி. ஷைலஜா. 2010, தீபாவளித் திருநாளை ஒட்டி வெளியிடப்படும் இந்தப் பதிவில் அவர் கவிதாயினி மதுமிதாவின் ஒரு புதுக்கவிதையையும் பகிர்ந்து கொள்கிறார்.










Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness