தண்டோரா



தமிழக கிராமங்களில் இன்றும் தகவல் பரிமாற்றத்திற்கு தண்டோரா பயன்படுத்துகின்றனர் என்பதை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. புரிசையில் தெருக்கூத்து பற்றிய பதிவுகளைச் செய்து முடித்து திரும்பும் போது ஊர் மக்களுக்கு ஒரு கோயில் திருவிழா தொடர்பான செய்தி சொல்வதற்காக ஒரு தண்டோராக்காரர் வந்திருந்தார். அவரது தண்டோராவை பதிவு செய்திருக்கிறேன். இங்கே கேட்டுப் பாருங்களேன்!



அன்புடன்

சுபா

பத்துப்பாட்டு முற்றோதல் - பகுதி 1, 2, 3

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் வாசகர்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இன்றைய நாளை சிறப்பிக்க இரண்டு அங்கங்கள் இடம் பெறுகின்றன. அவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள பத்துப்பாட்டு முற்றோதல் ஒலிப்பதிவுகள். பாகம்1, 2 , 3 ஆகியவை. (இவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அனுமதி பெற்று தயாரித்து இங்கு இணைக்கப்படுகின்றது)

அடுத்து இடம் பெறுவது ஒரு பேட்டியின் விழியப்பதிவு (2 பகுதிகள்)

1.பத்துப்பாட்டு முற்றோதல் ( நன்றி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் )

பாகம் 1
அ. திருமுருகாற்றுப்படை

முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா

ஆ.பெருநாராற்றுப்படை
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்


பாகம் 2
அ.சிறுபாணாற்றுப்படை

முற்றோதுபவர்கள்:
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்

ஆ.பெறும்பாணாற்றுப்படை
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா


பாகம் 3
அ.முல்லைப்பாட்டு

முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்


ஆ.மதுரைக்காஞ்சி
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
திரு.மா.கோடிலிங்கம்

அன்புடன்
சுபா

சாஸ்தா சரித்திரக் கும்மி

வணக்கம் மின்தமிழ் நண்பர்களே.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இம்மாத மண்ணின் குரல் இன்று மலர்கின்றது.!

இம்மாதப் பதிவைச் சிறப்பிப்பது சாஸ்தா சரித்திரக் கும்மி.

இந்த நூலில் 20 பாகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக கிராமிய கும்மி இசை வடிவத்தில் நமக்காக பாடி பதிவு செய்து அனுப்பியிருக்கின்றார் திருநெல்வேலியைச் சேர்ந்த திருமதி.ஜெயலட்சுமி அவர்கள்.

இவர்களுக்கும் இவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜடாயு அவர்களுக்கும் நம் நன்றி.
பதிவைக் கேட்க :
படிவு 1
பதிவு 2
பதிவு 3

இவ்வொலிப்பதிவுகளைக் கேட்டு அவை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஐயனார் வழிபாடு




தமிழகமெங்குமன்றி தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கூட ஐயனார் வழிபாடு என்பது சிறப்புற்று வழக்கில் இருந்து வருகின்றது. இத் தெய்வத்தை பற்றி விளக்கும் ஒரு பேட்டி ஒலிப்பதிவே இன்றைய வெளியீட்டில் முதல் அங்கமாக வெளிவருகின்றது.

மலை வளம், ஆற்று வளம் நிறைந்த இடங்களிலும் கிராமப்புறங்களிலும் இத்தெய்வ வழிபாடு மிகப் பரவலாக இருந்து வருகின்றது. வீர வழிபாட்டை பிரதிபலிப்பதாகவும் ஐயனார் வழிபாடு வழக்கில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் வீரர்கள் பற்றிய செய்திகள் உள்ளன். ஐயனார் ஐயனாரப்பன் என்றும் அழைக்கப்படுவது வழக்கில் உள்ளது. கல்வெட்டுக்களில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்த ஆலயங்களில் ஐயனார் வழிபாடு சாஸ்தா என்று குறிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் சாஸ்தா ஆலயம் இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒன்று.

பண்டைய காலத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் முக்கிய இடம் பெற்றிருந்த தேவேந்திரன் வழிபாடு ஐயனார் வழிபாடாக மாற்றம் கொண்டதா? ஐயனாரின் தோற்றம் என்ன? இவற்றையெல்லாம் விவரிக்கின்றார் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி.

ஐயனார் வழிபாடு!


பதிவு: மார்ச் 2011
பதிவு செய்தவர்: சுபா 

புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி கொ.மா.கோதாண்டம்

வணக்கம்.


தமிழ் இலக்கிய உலகத்துக்கு நன்கு அறிமுகமானவர் இராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள். மு.கு.ஜகந்நாதராஜா அவர்களைப் பற்றி அவரது நெருங்கிய நண்பரும் அவருக்குப் பின்னர் மணிமேகலை கலைமன்றத்தைத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வருபவருமான டாக்டர்.கொ..கோதண்டம் அவர்கள் வழங்கும் ஒரு சிறப்புப் பேட்டியைத் தாங்கி இம்மாத மண்ணின் குரல் ஒலிப்பதிவு இதழ் இப்பகுதியில்வெளிவருகின்றது.




குறிஞ்சிச் செல்வர் என்று சிறப்பித்து அழைக்கப்படும் டாக்டர். கொ.மா.கோதாண்டம் அவர்கள் தமிழில் குறிஞ்சி நிலம் பற்றியும், குறிப்பாக வன இயல், தாவரவியல், விலங்கியல் போன்ற துறைகளில் இலக்கியம் படைத்துள்ளவர். இதுவரை ஏறக்குரை 90 நூல்கள் இவரது படைப்புக்களாக வெளிவந்துள்ளன. புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்து ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி எழுதிய கட்டுரை ஒன்று தினமணியில் வெளிவந்துள்ளது. அதன் பதிவை நமது வலைப்பக்கத்தில் இங்கே காணலாம்.

இந்தப் பிரத்தியேக பேட்டியில் நமக்காக புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி தனது கருத்துக்களைப் இவர் பகிர்ந்து கொள்கின்றார்.

இம்மாத மண்ணின் குரல் வெளியீட்டில் இப்பேட்டி ஒலிப்பதிவின் இரண்டு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பதிவு கோப்புக்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 10 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.


பகுதி 1.

இப்பகுதியில் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் இலக்கியப் பணிகளை விவரிக்கின்றார் கொ.மா.கோதாண்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் வரலாற்றை தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் எழுதினார். கடின தெலுங்கில் அமைந்த அந்த நூலை புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். இந்த நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூலுக்க்கான சாகித்ய அக்காடமி பரிசு பெற்ற முதல் நூல் என்ற பெருமை பெற்றது என்றும் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா புறநானூறு முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களை தெலுங்கில் மொழி பெயர்த்தமை பற்றியும் விவரிக்கின்றார்.

பகுதி 2.

பூதலப்பட்டு ஸ்ரீ ராம ரெட்டி என்பவர் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை பெரியபுராணம் போன்ற தமிழ் காவியங்களை மொழிபெயர்த்திருக்கின்றார். அதற்குப் பிறகு யாரும் தமிழ் இலக்கியங்களை தெலுங்கில் மொழிபெயர்க்காத நிலையில் இவர் புறநானூற்றை தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பாலி மொழியறிவும் கொண்டிருந்தமையால் சில சமண பௌத்த நூல்களையும் தமிழிற்கு மொழி பெயர்த்துள்ளார்.

புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் இல்லத்தில் உள்ள ஜகந்நாதராஜா நூலகத்தில் அவரது அனைத்து நூல்களும், கையெழுத்துப் பிரதிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இப்பேட்டியில் இந்த நூலகத்தைப் பற்றியும் டாக்டர். கொ.மா.கோதாண்டம் விவரிக்கின்றார்.

மணிமேகலை காப்பியத்தில் அளப்பற்ற ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் புலவர் மு.கு.ஜகந்நாதரா அவர்கள் 1958-ஆம் ஆண்டில் ராஜபாளையத்தில் மணிமேகலை கலைமன்றத்தை உருவாக்கியிருக்கின்றார். இவரோடு டாக்டர். கொ.மா.கோதாண்டம் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து இக்கலைமன்றத்தின் வழியாக பல இளைஞர்களைப் பல்லாண்டுகளாக இலக்கியத்தில் ஈடுபட ஊக்கமளித்து வளர்த்து வந்திருக்கின்றனர். மணிமேகலை கலைமன்றத்தின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவற்றை தற்போது தலமைப் பொறுப்பில் இருந்து பல இலக்கியப் பணிகளைச் செய்து வருபவர் டாக்டர். கொ.மா.கோதாண்டம் அவர்கள்.

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைன் மண்ணின் குரலில் கேட்டு மகிழலாம்.

இப்பேட்டி கடந்த மார்ச் மாதம் நான் தமிழகத்திற்குச் சென்றிருந்த சமையம் நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்பேட்டியின் ஏனைய பகுதிகள் அடுத்தடுத்த மாத மண்ணின் குரலில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த பேட்டிக்கான ஏற்பாட்டில் உதவியவர்கள்: திருமதி.சீதாலஷ்மி, திருமதி.மதுமிதா மற்றும் அவர் கணவர், திரு.எஸ்.ராமச்சந்திரன், திரு.ரகுபதிராஜா ஆகியோர். அவர்களுக்கும் என்னுடன் துணையாக ராஜபாளையம் வந்திருந்து இவ்வொலிப்பதிவில் பங்கு கொண்ட திரு.திருமதி துரை அவர்களுக்கும் எனது நன்றி.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

இசக்கி அம்மன்

இசக்கி அம்மன் - விளக்கத்தை வழங்குபவர் டாக்டர்.பத்மாவதி: தமிழ் நாடு தொலியல் துறை

இரண்டு ஒலிப்பதிவுகள் உள்ளன.

அ. தமிழக கிராமப்புரங்களில் மக்களால் நம்பிக்கையுடன் வழிபடப்படும் தெய்வம் இசக்கி அம்மன். இந்த தெய்வத்தின் தன்மைகளை, எவ்வாறு இந்தத் தெய்வ வழிபாடு தமிழக மக்களின் வழிபாட்டு முறைகளில் கலந்தது என்பதை விளக்கும் ஒலிப்பதிவு முதலாவதாக இடம்பெறுகின்றது.

ஆ. அடுத்து, சமண சமயக் கதைகளைக் கூறும் ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்படும் யட்சியாம்பிகா, இசக்கி அம்மன் எனப்படும் தெய்வத்துடன் உள்ள தொடர்பினை இரண்டாவது ஒலிப்பதிவு விளக்குகின்றது.

இப்பேட்டிகளைக் கேட்கவும் இசக்கி அம்மன் கோயில் படங்களைக் காணவும் இங்கே செல்க!

இல்லத்து பிள்ளைமார் சமூகத்தினரும் நெசவுத் தொழில் தொடர்பான செய்திகளும்



தென் தமிழகத்தில் இல்லத்து பிள்ளைமார் என குறிப்பிடப்படும் குழுவினர் முன்னர் ஈழவர்கள் அல்லது நெசவு பணிக்கர்கள் என அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்சமயம் இச்சமூகத்தினர் நெசவுத் தொழிலில் ஈடுபடுவது குறைந்து விட்டது என்ற போதிலும் முன்னர் இவர்கள் சாணார்கள் (நாடார்கள்) எனப்படும் ஒரு சமூகத்தினருக்கு நெசவுத் தொழில் பணியில் ஈடுபட்டவர்களாக இருந்ததாக வரலாற்று, தொல்லியல் ஆய்வறிஞர் திரு.எஸ். ராமச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் இக்குழுவினர் சாணார் எனப்படும் (நாடார்கள்) சமூகத்தைச் சார்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பதற்கான சான்றுகள் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆவணங்களை ஆராயும் போது கிடைக்கப்பட்ட தகவலையும் குறிப்பிடுகின்றார்.

கான் சாஹீப் ஒரு இல்லத்துப் பிள்ளையார் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும்; கான் சாஹீப்பிற்கும் சாணார்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் எங்கே பிறந்தவர் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.

இவ்வொலிப்பதிவில் இறுதியாக நாலாட்டின் புதூர் பற்றிய சிறு தகவலும் வருகின்றது.

-பேட்டி !

கண்ணனின் கவிதை - அண்டகோளம்


நா.கண்ணன்


அண்டகோளம்..!

திருக்குறள் உரைகள் - நாகநந்தி (2)

திருக்குறள் உரைகள் - வழங்குபவர் மறைந்த பேராசிரியர் டி.வேணுகோபால் (நாகநந்தி)

இவ்வொலிப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காகச் சேகரித்து வழங்கியவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள்.

ஆனந்தம்.. ஆனந்தம்.. ஆனந்தமே!


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


ஆனந்தம்.. ஆனந்தம்.. ஆனந்தமே!

தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா


தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா சென்னையில் 13.03.2011 அன்று நிகழ்ந்தது. இவ்விழாவில் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இங்கே செல்க.



சைவ சித்தாந்தக் கருத்துக்கள் - 1



தருமபுர ஆதீன மடாதிபதியின் உரை. பண்களிலிருந்து ஆரம்பித்து, பின்னர், திருஞானசம்பந்தரைப் பற்றி பேசி பின்னர் சிவ சக்தி தத்துவத்தைப் பற்றி விளக்கி, மெய்கண்டாரின் தத்துவ விளக்கங்களையும் தொட்டு பேசுகின்றார். பின்னர் விரிவாக மாயை பற்றி விளக்கமளிக்கின்றார். மிக எளிமையாக இந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்த உரையாடலின் முதல் பகுதியை இன்று வெளியிடுகின்றேன். கேட்டு மகிழ்வோம்.
பேட்டி ஒலிப்பதிவு: சுபாஷினி 

கவிஞர் திருலோக சீதாராம்



கவிஞர் திருலோக சீதாராம் பற்றி திரு.மோகனரங்கன் உரையாற்றுகின்றார். இலக்கிய வானிலே மின்னல் எனத் தோன்றி மறைந்தவர் கவிஞர் திருலோக சீதாராம்.பாரதி பாடல்களைப் பட்டி தொட்டியெங்கும் பாடிப் பரப்பியவர் இவர். வெறும் கவிதை மட்டும் எழுதியவர் அல்ல; கவிஞனாகவே வாழ்ந்தவர் கவிஞர் திருலோக சீதாராம் என்கிறார் திரு.மோகனரங்கன். கவிஞர் திருலோக சீதாராம் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை இந்த உரையில் சுவைபட குறிப்பிடுகின்றார். அத்துடன் அவர் தம் கவிதையையும் வாசித்து அளிக்கின்றார். கேட்டு மகிழ்வோம்.

பாண்டியர்கள் காலத்தின் கடல் வணிகம்





ஒரிசா பாலுவுடனான் ஒரு கலந்துரையாடலின் இரண்டாம் பகுதி இது. பாண்டியர்கள் குறிப்பாக சங்க இலக்கியம் சொன்ன வரலாற்றுச் செய்திகளைப் பற்றி கூறி இப்பகுதியை ஆரம்பிக்கின்றார்.பாண்டியர்கள் ரோமனியப் பேரரசு வரை சென்றிருக்கின்றனர். அரபு வணிகர்கள் கடல் பயணம் பற்றிய தகவல்கள், இந்தியாவிலிருந்து கடல் வணிகம்,என்பது குறிப்பாக வைரம், நவரத்தினம், மிளகு ஆகியவற்றிஐ அடிப்ப்டையாகக் கொண்டது; கடல் வணிகம் என்னும் போது கப்பல் கட்டும் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்கியிருந்தமை பற்றியும் விளக்குகின்றார். -:இப்பகுதியைக் கேட்க!

பேட்டி கண்டவர்: சுபாஷினி .(June, 2010)

புதிய தமிழ் வாழ்த்து

மலேசிய எழுத்தாளர் சங்கம் ஜனவரி 23ம் தேதி வெளியிட்டுள்ள புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.








நிலைபெறநீ வாழியவே!
ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!

வெளியீட்டு விழாப்படங்கள் காண இங்கே சொடுக்குக!

பாடல் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சொடுக்குக!

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: பகுதி 6-7

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியின் சில பகுதிகள் தொடர்கின்றன.





பகுதி 6
பயிற்சிகளின் போது எப்படி கல்வெட்டுக்களை வாசிப்பது, எந்த சிலைகள் எந்த தெய்வங்களின் வடிவங்கள் என சிலைகளைப் பார்த்து கண்டுபிடிப்பது போன்ற விஷயங்களை எப்படித் தெரிந்து கொள்வது போன்ற சில தகவல்கள் இப்பகுதியில் வழங்கப்படுகின்றன. இவர்களின் ஆய்வுக் குழுவினருக்கு ஈconography எனப்படும் ஆய்வு முறையை அறிந்து கொள்வதற்கு டாக்டர்.நாகசாமி வழங்கிய பயிற்சிகள் உதவியிருக்கின்றன.
தேவநாகரி, வட்டெழுத்து, கிரந்தம் இவை அனைத்திலும் தீவிர பயிற்சி இவர்களுக்கு கிடைத்திருந்ததால் கல்வெட்டுக்களைப் பார்த்ததுமே கண்டுபிடிக்கும் திறன் வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்.

ஒரு கோயிலைப் பார்க்கும் போதே அதில் உள்ள விக்கிரகங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவை இந்த கோயிலை சார்ந்தவைதானா என்பதை உடனே அறிந்து கொள்ளும் திறனும் அனுபவத்தின் மூலம் கிடைத்திருக்கீன்றது.

ஒரு கோயிலின் கட்டிட அமைப்பு எப்படி அமைந்திருக்கும் என்ற விளக்கமும் இப்பகுதியில் வழங்கப்படுகின்றது. இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.


பகுதி 7
ஆதித்த சோழன், பராந்தக சோழன் போன்ற மாமன்னர்களின் கட்டிடக் கலை சிலை அமைப்புக்கள் போன்றவற்றை நேரடியாக பார்த்து எவ்வாறு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்கள் பாடம் நடத்துவார் என்று இப்பகுதியில் விளக்குகின்றார்.
சோழர் காலத்து சிலைகளுக்கும், நாயக்கர் கால சிலைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை எப்படி கண்டு பிடிப்பது என்று விளக்குகின்றார்.

தனது ஆய்வுப் பணிகளின் ஆரம்ப காலகட்டங்களில் எளிமையான வடிவங்களான ஸ்ப்த கண்ணிகளை அடையாளம் காண்பதை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தையும் பின்னர் மிக எளிமையாக எல்லாவிதமான கலை வடிவங்களின் வேறுபாடுகளை தெரிந்து கொண்ட விதத்தையும் கூட விளக்குகின்றார். இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.

இப்பேட்டிகளை கேட்க:
-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்

திருக்குறள் உரைகள் - நாகநந்தி

திருக்குறள் உரைகள் - வழங்குபவர் மறைந்த பேராசிரியர் டி.வேணுகோபால் (நாகநந்தி)

இவ்வொலிப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காகச் சேகரித்து வழங்கியவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள்.

-:பகுதி 1
-:பகுதி 2
-:பகுதி 3
-:பகுதி 4

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness