24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - டாக்டர்.பத்மாவதி

வணக்கம்!


மண்ணின் குரல் வெளியீட்டில் மேலும் ஒரு பதிவினையும் வெளியிடுகின்றேன்.

சிறப்புச் சொற்பொழிவுகளில் ஒன்றான டாக்டர்.பத்மாவதியின்சொற்பொழிவின் பதிவு இது.



தொல்லியல் ஆய்வுகள் - இன்று

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திருவிந்தளூர் செப்பேடு பற்றிய ஆய்வில் ஈடுபட்டதோடு அந்த ஆய்வேடு தயாரிப்பில் முக்கியப்பங்கு வகித்த டாக்டர்.பத்மாவதி இந்தச் செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விதம். செப்பேடுகளில் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தையும் மிக மிக விரிவாக எளிய தமிழில் மிகச் சுவாரசியமாக வழங்குகின்றார்.

வரலாற்று ஆய்வாளர்களுக்கும் தொல்லியல் துறை ஆர்வலர்களுக்கும் நிச்சயம் பயன்தரும் ஒரு சொற்பொழிவு இது.

ஒலிப்பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - டாக்டர்.வ.ஜெயதேவன்


மண்ணின் குரல் வெளியீட்டில் மேலும் ஒரு பதிவினையும் வெளியிடுகின்றேன்.



சிறப்புச் சொற்பொழிவுகளில் ஒன்றான டாக்டர்.வ.ஜெயதேவனின் சொற்பொழிவின் பதிவு இது.

இலக்கிய ஆய்வுகள் இன்று.


தமிழ் நாட்டு கல்விச் சூழலில் நடைபெறுகின்ற பொதுவான நிலையை விளக்குமும் ஒரு சொற்பொழிவாக  இது அமைந்துள்ளது. 



அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - டாக்டர்.ம.ராஜேந்திரன்


தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர்.மராஜேந்திரன் அவர்கள் உரை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது. 



தமிழ்த்தேனியாரின் அறிமுகத்துடன்  தொடங்கும் இந்தச் சிற்றுரையில் அவர்:
  • தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள், அவற்றின் பயன்
  • மரபுச் செல்வங்கள் 
  • எவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவை, எவற்றிற்கு முன்னுரிமை தேவைப்படுகின்றது
  • தமிழ் நூல்கள் அட்டவணை
  • தமிழ் நூல்களுக்கு த.ம.அ செய்ய வேண்டிய பணிகள்
என சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - மாலன்




திரு.மாலனின் கருத்தாக அமையும் இந்தப் பதிவில் அவர்:
  • தமிழ் நூல்கள் மின்னாக்க முயற்சிகள்
  • ஆய்வேடுகளின் தரம் குறைந்த நிலை 
  • மூன்றாம் மரபு - நாடுப்புற இலக்கியம் தொடர்பாக நாம் செய்யவேண்டிய பணிகள் 
  • அழிந்து வரும் தமிழ்ப் பாரம்பரிய வாத்தியக் கருவிகள், அவை பற்றிய தகவல் சேகரிப்பு
  • செய்யக் கூடிய வகையில் மாத சந்திப்பு அதில் பதிவுச் செய்யப்படாத விஷயங்களை ஆராய்ந்து பதிவு செய்தல்
என தன் கருத்துக்களைப் பதிகின்றார். 

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாட்டுப்புறவியல் ஆய்வு - 24-2-2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு

வணக்கம்.

இம்மாத மண்ணின் குரலில் சென்னையில் 24.2.2013 அன்று நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் நிகழ்வில் இடம்பெற்ற ஒரு சொற்பொழிவினை பகிர்ந்து கொள்கின்றேன்.

தமிழ் சூழலில் நாட்டுப்புறவியல் ஆய்வு, இந்த ஆய்வு ஏன் தேவை, ஏன் இப்பதிவுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வகையில் இந்த சொற்பொழிவு விளக்குகின்றது.

இச்சொற்பொழிவை வழங்குபவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர்.முத்தையா அவர்கள்.




அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness