வையம் விரிந்த தமிழன் - பேரா.டாக்டர்.நா.கண்ணன் உரை

To listen to the speech Click here!

ஆதி.குமணன் என்பவர் நடு வயதில் மரித்த திறமையான மலேசியப் பத்திரிக்கை ஆசிரியர், முற்போக்கு எழுத்தாளர், அரசியல் விமர்சகர். அவரது 66 அகவை நினைக் கூட்டமொன்று செவ்வாயன்று (பிப்ரவரி 9, 2016) நடந்தது. ஆதி குமணனின் சகோதரர் ஆதி.ராஜகுமாரன் என் நீண்ட நாள் நண்பர். தமிழ் இணையம் தோன்றிய காலத்து நண்பர்.டமிழுக்கு "இணையம்" என்ற சொல்லைத்தந்த நண்பர். 2011ம் ஆண்டு என்னைப் பேச வைத்தார்.



அது சமயம் நான் கொரியாவிலிருந்தேன். அங்கிருந்தே ஸ்கைப் வசதி கொண்டு பேசினேன். கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். அப்போது பேசிய பேச்சு நமது நிகழ்கலை வலைப்பதிவில் காணக்கிடைக்கிறது.

http://www.authorstream.com/Presentation/nkannan-839911-tamil-korean-relationship/

இப்போது நான் மலேசியாவிற்கே வந்துவிட்டதால் மீண்டும் என்னைப் பேச அழைத்திருந்தார் திரு.ராஜகுமாரன். இது சீனப்புத்தாண்டு விடுமுறை காலம். எல்லோரும் ஹாய்யாக தொலைக்காட்சியை குடும்ப சகிதம் கண்டு மகிழும் விடுமுறைக் காலம். ஆனால், வேலை மெனக்கெட்டு இந்த நிகழ்ச்சிக்கு 70 பேருக்கும் மேல் வந்திருந்தனர்.



இதைக்குறிப்பிடும் போது ராஜகுமாரன் இக்கூட்டம் ஆதிகுமணனின் நினைப் போற்றவும், நா.கண்ணனின் பேச்சை ரசிக்கவும் வந்த கூட்டமொன்றார் ;- உண்மையில் பல நண்பர்கள் என்னிடம் அவ்விதமே சொன்னர். மகிழ்வாக இருந்தது.



உலகமெலாம் உணர்ந்து ஓதற்கரியவன், உலகம் யாவையும் தாமுளவாக்கலும், ஆதிபகவன் முதற்றே உலகு என்று உலக நாகரீகங்கள் விழித்துக்கொள்ளுமுன் உலகப்பார்வையில் பேசியவன் தமிழன். லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்பதும் பொதுவான இந்தியப் பார்வை. சங்கப்பாடல்கள் நாவலத்தீவு என்று இந்திய உபகண்டம் முழுமையும் கண்டு பேசுவது ஆச்சர்யம். பூகோள பகோள விஷயம் போன்ற பேச்சுக்கள் பூமி தாண்டி நிலாப்பேச்சு பேசுகிறது.

வையம் விரிந்த பார்வை இருந்ததால்தான் அவன் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்" என்று சொன்னான். வாழ்வின் நிலையாமை கண்டு பெரியோரை வியத்தலும் இலமே, சிறியரை இகழ்தல் அதனினும் இலமே! எனும் முதிர்ச்சியான பார்வை கொண்டிருந்தான். மேற்கே ரோமாபுரியிலிருந்து கிழக்கே ஜப்பான்வரை இவனது போக்குவரத்து இருந்திருப்பதற்கான ஆதரங்கள் மெல்ல, மெல்ல வெளிப்படுகின்றன.

ஈழச்சமருக்குப் பின் இடப்பெயர்ந்த தமிழன் இப்போது உலகெலாம் வாழ்கிறான். தமிழ் கூறு நல்லுலகில் சூரியன் மறைவதே இல்லை!



அந்த உலகளாவிய பார்வை மீண்டும் தமிழனுக்கு வர வேண்டும். அவனது குறுகிய பார்வைகள் நீங்க வேண்டும். சங்கம் காட்டிய அழகுணர்ச்சி, மெல்லிய உணர்வுகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். உலக அரங்கில் மதிக்கத்தக்க மனிதனாக தமிழன் மீண்டும் உலா வர வேண்டும்!


முகநூல் பதிவுகள்:

https://www.facebook.com/narayanan.kannan.37/posts/10153907493197299
https://www.facebook.com/narayanan.kannan.37/posts/10153911506192299

நா.கண்ணன்

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness