Showing posts with label Vinayagar Agaval. Show all posts
Showing posts with label Vinayagar Agaval. Show all posts

தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி வெளியீடுகள்



1.விநாயகர் அகவல்





2010 தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த திரு. தமிழ்த்தேனி அவர்கள் ஆழ்கடலைவிட ஆழமான இந்த எளிய இலக்கியத்தை பதிவு செய்து அளித்துள்ளார். விநாயகர் அகவல், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சங்கப் புலவர்களுள் ஒருவரான, குழந்தை இலக்கியத்தில் புதுமை கண்ட ஔவைப்பாட்டி இயற்றியது. அது இயற்றப்பட்ட சூழ் நிலையையும் அழகாக விளக்கியிருக்கிறார் தமிழ்த்தேனியார். தமிழகத்தின் முழுமுதற் கடவுளின் அருட்பார்வை இந்த தீபாவளித் திருநாள் முதல் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்கட்டும்.



2. ஆத்திச்சூடி




ஔவை இயற்றிய பற்பல நூல்களில் முதன்மையானது ஆத்திச்சூடி. எளிமையான, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய சின்னஞ்சிறிய வாக்கியங்களாக அமைந்திருக்கும் இவ்விலக்கியம் 108 வாக்கியங்களைக் கொண்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் கற்றுப் பின்பற்ற வேண்டிய இந்த உரையை, 2010 தீபாவளிக்காக, நமக்காக தொகுத்தளிப்பவர், ஈரோட்டைச் சேர்ந்த திருமதி. பவள சங்கரி. குழந்தை இலக்கியமல்லவா! இயல்பான பேச்சு நடையில் அவர்களுக்காகவே இதை வெளியிட்டிருக்கிறார்.









3. இனிக்கும் இலக்கியம்: குழந்தை

நற்றிணைப்பாடல் பெங்களூரைச் திருமதி. ஷைலஜாவின் இலக்கிய ஆர்வம் நாம் நன்கு அறிந்ததே. அவர் தன் மனங்கவர்ந்த இலக்கியங்களை, ‘இனிக்கும் இலக்கியம்” என்று தொடராக வழங்குகிறார்”. 2010 தீபாவளிக்காக, இந்த இணைப்பில், குழந்தையைப் பற்றிய ஒரு நற்றிணைப் பாடலை விளக்குகிறார்.








4. இனிக்கும் இலக்கியம்: காதல்

முத்தொள்ளாயிரம் தமிழ் மரபில் வீரமும் காதலும் முக்கியத்துவம் பெற்றவை. தூய்மையான காதலைப்பற்றிய இலக்கியங்கள் அனேகம். தன் “இனிக்கும் இலக்கியம்” தொடரின் பகுதியாக, முத்தொள்ளாயிரத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி. ஷைலஜா. 2010, தீபாவளித் திருநாளை ஒட்டி வெளியிடப்படும் இந்தப் பதிவில் அவர் கவிதாயினி மதுமிதாவின் ஒரு புதுக்கவிதையையும் பகிர்ந்து கொள்கிறார்.










Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness