இழையெடுத்தல்



இழையெடுத்தல் என்னும் இந்த நோன்பு நகரத்தார் சமூக மக்களால் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு. இந்த நோன்பை இலங்கையில் விநாயகர் சஷ்டி என்று குறிப்பிடுகின்றனர்.


இந்தப் பண்டிகையில் கருப்பட்டி பணியாரமும் ஆவாரம்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 21 நாள் விரதம் இருந்து செய்கின்ற இந்த நாளில் 21 இழை எடுத்தல் என்பது முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. இந்தப் பேட்டியில் இழை எடுத்தல் பற்றி டாக்டர்.வள்ளி விரிவாகக் குறிப்பிடுகின்றார்.

மரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

ஒலிப்பதிவைக் கேட்க

இப்பேட்டியை ஏற்பாடு செய்து ஒலிப்பதிவினை அனுப்பி வைத்த டாக்டர்.காளைராசனுக்கு நன்றி.

தேவகோட்டை ஜமீன்


சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த  குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார்.



இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர் செய்த ஆலாயத் திருப்பணிகள் பல. காளையார் கோயில் திருப்பணி, ராமேஸ்வர சத்திரம் மற்றும் கோயில் திருப்பணி, காளகஸ்தி கோயில் திருப்பணி, சாலை புதுப்பித்தல் எனப் பல சமூகப் பணிகளைச் செய்ததை நாம் மறக்க முடியாது.

தமிழ் மரபு அறக்கட்டளையினர் ஜனவரி 2012 காரைக்குடி பகுதிக்குச் சென்ற போது இன்றைய தேவகோட்டை ஜமீன் வாரிசான திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றோம்.


அவர் அளிக்கும் பேட்டியும் டாக்டர்.வள்ளி அவர்கள் அளிக்கும் பேட்டியும் மேலும் இந்த வரலாற்றை அழகுற நமக்கு விவரிக்கும்.

திரு.ராமகிருஷ்ணன்

டாக்டர்.வள்ளி

நன்றி: இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினைச் செய்த விசாகப்பட்டினம் திரு.திவாகருக்கு த.ம.அ வின் நன்றி.

படங்கள், ஒலிப்பதிவு, வீடியோ பதிவு: சுபா 

அன்புடன்
சுபா
(தமிழ் மரபு அறக்கட்டளை)

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness