சைவ சித்தாந்தக் கருத்துக்கள் - 1



தருமபுர ஆதீன மடாதிபதியின் உரை. பண்களிலிருந்து ஆரம்பித்து, பின்னர், திருஞானசம்பந்தரைப் பற்றி பேசி பின்னர் சிவ சக்தி தத்துவத்தைப் பற்றி விளக்கி, மெய்கண்டாரின் தத்துவ விளக்கங்களையும் தொட்டு பேசுகின்றார். பின்னர் விரிவாக மாயை பற்றி விளக்கமளிக்கின்றார். மிக எளிமையாக இந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்த உரையாடலின் முதல் பகுதியை இன்று வெளியிடுகின்றேன். கேட்டு மகிழ்வோம்.
பேட்டி ஒலிப்பதிவு: சுபாஷினி 

கவிஞர் திருலோக சீதாராம்



கவிஞர் திருலோக சீதாராம் பற்றி திரு.மோகனரங்கன் உரையாற்றுகின்றார். இலக்கிய வானிலே மின்னல் எனத் தோன்றி மறைந்தவர் கவிஞர் திருலோக சீதாராம்.பாரதி பாடல்களைப் பட்டி தொட்டியெங்கும் பாடிப் பரப்பியவர் இவர். வெறும் கவிதை மட்டும் எழுதியவர் அல்ல; கவிஞனாகவே வாழ்ந்தவர் கவிஞர் திருலோக சீதாராம் என்கிறார் திரு.மோகனரங்கன். கவிஞர் திருலோக சீதாராம் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை இந்த உரையில் சுவைபட குறிப்பிடுகின்றார். அத்துடன் அவர் தம் கவிதையையும் வாசித்து அளிக்கின்றார். கேட்டு மகிழ்வோம்.

பாண்டியர்கள் காலத்தின் கடல் வணிகம்





ஒரிசா பாலுவுடனான் ஒரு கலந்துரையாடலின் இரண்டாம் பகுதி இது. பாண்டியர்கள் குறிப்பாக சங்க இலக்கியம் சொன்ன வரலாற்றுச் செய்திகளைப் பற்றி கூறி இப்பகுதியை ஆரம்பிக்கின்றார்.பாண்டியர்கள் ரோமனியப் பேரரசு வரை சென்றிருக்கின்றனர். அரபு வணிகர்கள் கடல் பயணம் பற்றிய தகவல்கள், இந்தியாவிலிருந்து கடல் வணிகம்,என்பது குறிப்பாக வைரம், நவரத்தினம், மிளகு ஆகியவற்றிஐ அடிப்ப்டையாகக் கொண்டது; கடல் வணிகம் என்னும் போது கப்பல் கட்டும் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்கியிருந்தமை பற்றியும் விளக்குகின்றார். -:இப்பகுதியைக் கேட்க!

பேட்டி கண்டவர்: சுபாஷினி .(June, 2010)

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness