கடலோடியின் கம்போடிய நிகழ்வுகள்: நூல் விமர்சனம் - முனைவர்.க. சுபாஷிணி

கடலோடியின் கம்போடிய நிகழ்வுகள்: நூல் விமர்சனம்.
நூலாசிரியர்: கடலோடி நரசய்யா

வழங்குபவர்: சுபாஷினி



-:நூல் விமர்சனம்

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: 1 - முனைவர் பத்மாவதி

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியின் முதல் பகுதி.

இந்த ஒலிப்பதிவில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன.
1) அறிமுகம் - இப்பகுதியில் தனது தற்போதைய பணிகள் பற்றி விளக்குகின்றார். அத்துடன் தான் தற்போது பிரத்தியேகமாக மேற்கொண்டுள்ள களப்பிரர் வரலாறு பற்றிய நூல் பணிகள் பற்றிய சிறு விளக்கமும் வருகின்றது. 1940ல் முதலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடு கிபி.8ம் நூற்றாண்டின் முற்பகுதியைக் களப்பரர் அரச வம்சம் ஆண்ட செய்திகள் பின்னர் அது பற்றி தொடரப்பட்ட ஆய்வுகள் தனது தற்போதைய பணிகள் என்று செல்கின்றது இப்பகுதி.

2) பனியில் சேர்ந்த பொழுது முதலில் இவருக்கு ஆய்வுக்கு வழங்கப்பட்ட ஊர் தஞ்சை. இங்கு தான் மேற்கொண்ட பணியைப் பற்றி விளக்குகின்றார். குழுவாக பணியை எப்படி ஆய்வாளர்கள் மேற்கொள்வர் என்று விளக்குகின்றார். கல்வெட்டுக்கள் ஆய்வுகள் செய்யும் வழிமுறைகள், எழுத்துக்களைக் கண்டு பிடிக்கும் முறை, எழுத்துக்களை கையாளும் முறை.
என சரளமாக தனது அனுபவங்களை வழங்குகின்றார்.





-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள் - 1

ஒலிப்பதிவு செய்தவர்: சுபா (28-06-2010)

கடல் வணிகம் - ஒரிசா பாலு

இப்பேட்டியில்:
-கடல் ஆய்வுகளைப் பற்றிய பொது விளக்கம்.
-பாப்புவா நியுகினி நாட்டில் தமிழ் சொற்களைப் பற்றிய சில செய்திகள்
-கடல் வணிகம்..
-கடல் ஆமைகளின் பங்கு..

போன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன.




-:கடல் வணிகம்


பேட்டி கண்டவர்: சுபாஷினி 

தமிழகத்தில் பெண்கள் - நாகசாமி

பொது வாழ்வில் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கின்றது என்பதை பற்றி தனது கருத்துக்களைச் சொல்வதாக இந்த பேட்டி ஆரம்பிக்கின்றது. அதிலிருந்து அரசர்களின் காலத்திற்குச் செல்கின்றார் முனைவர்.நாகசாமி.

இராஜராஜனின் தலைமை தேவியான லோகமகாதேவி தஞ்சாவூரில் இராஜராஜன் பெருங்கோயிலை கோயிலைக் கட்டிமுடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பெயரிலேயே லோகமகாதேவீச்வரம் என்ற கோயிலை கட்டி அதற்கு தனது பெயரையே சூட்டியிருக்கின்றார்.

திருவையாற்றிலே அவர் பெயரால் இந்தக் கோயில் கட்டியிருக்கின்றார். அதற்கு லோகமகாதேவீச்வரம் என்று பெயரும் சூட்டியிருக்கின்றார். இது அரசன் கட்டியதல்ல. மாறாக அரசியே கட்டியது. அந்தக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதற்குச் சான்றாக அமைந்திருக்கின்றது. "திருவையாற்றுப்பால் நாமெடுப்பித்த லோகமகாதேவிச்வரமுடையாருக்கு நாம் கொடுத்தன கல்லில் வெட்டு" என்ற அரசியே ஆணையிட்டுக் கொடுத்தது குறிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பொதுவாக கோயில்களில் அதிகாரிகளாகவும் தலைமை அதிகாரியாகவும் இருப்பவர்கள் ஆண்கள். ஆனால் அந்தக் கோயிலிலே தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் ஒரு பெண். குஞ்சரமல்லி என்று அவருக்கு பெயர். அவருக்குக் கீழே பணி புரிந்தோர் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும். குஞ்சரமல்லியிடம் ஆணை பெற்றுக் கொண்டு பணி புரிந்திருக்கின்றனர் என்ற இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது என்று குறிப்பிடுகின்றார்.

சோழர் காலத்திலே, குந்தவை பிராட்டியார் வணிகம் நடக்கும் இடத்தில் அதாவது ஏலம் போடுகின்ற இடத்திலே தனியாக நின்று அவர் வணிகம் பேசியதையும் இவர் குறிப்பிடுகின்றார்.

அதனால் பெண்கள் அதிகாரிகளாக இருந்தமைக்கானச் சான்றுகள் இருக்கின்றன என்று இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.
பெண்கள் அரசிகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கின்ரார்களா என்பதற்கும் சில உதாரணங்கள் வருகின்றன இந்தப் பேட்டியில். ஆண்கள் அரசாட்சி செய்த போது என்னென்ன அதிகாரங்களெல்லாம் கொடுக்கபப்ட்டிருந்தனவோ அத்தனை அதிகாரங்களும் பெற்று பெண் அரசியர் ஆட்சி செய்திருக்கின்றனர். மதுரையில் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ராணி மங்கம்மாள் தனி அரசியாக இருந்திருக்கின்றார். அவளது காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த ராணியின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதன் மேல் தெலுங்கிலும் தமிழிலும் மஹாராஜராஜ ஸ்ரீ ராணி மங்கம்மா என்று குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது .

அவருக்குப் பின்னர் வந்தவர் மீனாட்சி. முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கன் என்பரின் மனைவி. இவர் தனியாட்சி புரிந்திருக்கின்றார் என்றும் குறிப்பிடுகின்றார்.

பெண்கள் தனியாட்சி செய்தவர்களாக, வணிகம் செய்தவர்களாக, அதிகாரிகளாக தங்கள் பெயரிலேயே தானம் செய்தவர்களாக, அரசனுக்குரிய சம உரிமை உடையவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்றார்.

தனது பேச்சினைப் பாரதியின் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவொம் என்று கூறி முடிக்கின்றார். கேட்டுப் பாருங்கள்.





-:தமிழகத்தில் பெண்கள்


பேட்டி கண்டவர்: சுபாஷினி .

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness