பெண்ணேஸ்வரர் திருக்கோயில்


பெண்ணேஸ்வரர் திருக்கோயில்
பதிவு:05.03.2012
ஒலிப்பதிவு: சுபா 
படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், சுபா 


தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம் முருகன் அவர்கள் கூறக்கேட்டு பதிவு செய்து வந்தனர். இப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் : செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் சுகுமாரன், டாக்டர்.நாகண்ணன், சுபா ஆகியோர்.




மேலும் படங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பதிவுகளின் விளக்கங்களையும் காண தமிழ் மரபு அறக்கட்டயின் வரலாற்றுப் பகுதியில் இங்கே செல்க!

சொல்லோவியம்: கார்த்திகேசு சிவத்தம்பி




சமீபத்தில் மறைந்த யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பற்றிய மிக அரிய சேதிகளூடான ஓர் சொல்லோவியம். 

தயாரித்து அளிப்பவர் இளையதம்பி தயாநந்தா.

சொல்லோவியம் கேட்க!!

தூத்துக்குடி பவளப்பாறைகள்


தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ளது வ.உ.சி. கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஜியாலஜி துறை ஆய்வாளர்-விரிவுரையாளர் டாக்டர்.உதயனப் பிள்ளை அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தூத்துக்குடி ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள தீவுகள், பவளப் பாறைகள், முத்துக்குளித்துறை தொடர்பான பல விஷயங்களைப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். பேட்டிகள் 4 பகுதிகளாக உள்ளன.

பேட்டி பதிவுகள்:11.3.2011
ஒலிப்பதிவும் படங்களும்: சுபா 
ஏற்பாடு உதவி: திரு.துரை.ந.உ.

பேட்டிகளைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இங்கே செல்க!.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி


வணக்கம்.



தூத்துக்குடிக்கு 2011ம் ஆண்டில் நான் சென்றிருந்த போது வ.உ.சி. கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. திரு. துரை அவர்களும் என்னுடன் வந்திருந்தார்கள். அச்சமயம் வ.உ.சிதம்பரம் அவர்களின் பெயரில் இயங்கி வரும் கல்லூரிக்குச் சென்றிருந்தோம். கல்லூரி முதல்வர் இக்கல்லூரியை விளக்கி அறிமுகம் செய்யும் ஒரு பேட்டியினைப் பதிவு செய்திருந்தேன். கல்லூரி முதல்வர் திரு.ப்ரான்ஸிஸ் அவர்கள் இப்பேட்டியை வழங்குகின்றார்கள்.



இப்பேட்டியில்

  • 1951ம் ஆண்டு வ.உ.சியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி.
  • வ.உ.சி. கல்விக்கழகம்
  • வ.உ.சி நினைவாக ஒரு மணி மண்டபம் கட்டலாம் என்று தொடங்கிய இத்திட்டம் பின்னர் சமூகத்திற்கு கல்விச் சேவை வழங்கும் வகையில் பயன்படும் வகையில் கல்லூரியாக ஏற்படுத்தப்பட்டது. 
  • வந்தே மாதரம் என்ற கோஷம் பொறிக்கப்பட்ட முகப்புடன் இக்கல்லூரி உள்ளது.
  • சமயச் சார்பின்மைக்கு வாழும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது இக்கல்லூரி. இக்கல்லூரியை ஏற்படுத்தியவர்கள் தீவிர சைவ சமயத்தினராக இருந்தாலும் இக்கல்லூரியில் எங்குமே சமயச் சின்னங்கள் இல்லாமல் சமயச் சார்பின்மை இல்லாமல் கல்வியை மட்டுமே முன்னிலைப் படுத்தி ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர்.
  • கல்லூரியில் இயங்கி வரும் துறைகள் ஆய்வுகள் 
என சில தகவல்களை கல்லூரி முதல்வர் வழங்குகின்றார்.

பேட்டியைக் கேட்க!



குறிப்பு: பயணத்திற்கான உதவிகள் செய்த திரு.திருமதி துரை, திருமதி சீதாலட்சுமி ஆகியோருக்கு என் நன்றி.


வ.உ.சி அவர்கள் பற்றிய சில பதிவுகள் நமது வலைத்தளத்தில் உள்ளன அவற்றை

ஆகிய பக்கங்களில் காணலாம்.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

திரு.எஸ்.ராமச்சந்திரனின் சில சமூகவியல் கருத்துக்கள் -2


இவ்வொலிப்பதிவின் முதல் பகுதியில் நாட்டார் வழக்காற்றியல், சமூகத்தில் அடிமைகள், தாசி என்பன பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. அவற்றை இங்கே வாசித்தும் கேட்டும் மகிழலாம்.

இன்றைய பதிவில் இடம்பெறும் தகவல்களைக் காண்போம்.

பதிவு 1 - விஷ்வபிராமணர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
  • விஷ்வ பிராமணர்கள் எனப்படுபவர்களின் வழக்குகள்
  • தைத்ரிய சம்ஹிதை என்பதன் பொருள்
  • சூத்ரங்கள் - அதன் உட்பொருள்கள்
என்பன போன்ற தகவல்களை வழங்குகின்றார்.



பதிவு 2 - தூத்துக்குடியும் உப்பு வணிகத்துறையும்



இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
  • எப்படி முத்து அரசனுக்கு சொந்தமோ அதே போல உப்பு அரசனுக்கு சொந்தம் என்பது வழக்கு. 
  • தூத்துக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகம் உள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக இத்தொழில் ஈடுபட்டவர்கள் பண்ணையார் என்று அழைக்கப்படும் ஒரு சமூகத்தினர். 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களிலேயே இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன; சித்திரவல்லி என்ற பட்டத்தோடு இவர்கள் குறிப்பிடப்படுகின்றார்கள். 
  • உப்பளத் தொழிலில் தூத்துக்குடி பரதவர்கள் அதிகம் ஈடுபடவில்லை. 
  • நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உப்பு வியாபரத்தில் அதிகம் ஈடுபட்டிருக்கின்றனர்.
  • ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் எனும் நாவல் உப்பளத்து மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒன்று. 
  • உப்பளத்தில் பணியாற்றும் மக்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்க்கைச் செய்திகளைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு நாவல். 
இப்படி இவ்வொலிப்பதிவு செல்கையில் ராஜம் கிருஷ்ணனின் களப்பணிகள் பற்றி திருமதி.சீதாலட்சுமியும் விவரிக்கின்றார்.



பதிவு 3 - பாண்டியர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 

கான் சாஹீப் எழுதிய கடிதம்
  • 1756ல் தென்காசி கோயிலைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவர்கள் புலித்தேவர்கள். இவர்கள் 11 பேரை சுட்டு கொன்று தென்காசி பகோடாவை தனது ஆளுமைக்குள் கொண்டுவந்ததாக கான்சாஹீப் கடிதம் எழுதுகின்றான்.
  • 1754ம் ஆண்டைச் சேர்ந்த தென்காசிப்பாண்டியர்களின் செம்பு பட்டையம் குற்றாலம் கோயிலில் உள்ளது.
  • புலித்தேவர் சமூகத்தின் வம்சமும் ஜாதியும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. புலித்தேவரும் அவர் சமூகத்தினரும் மறவர் குலத்தினர் என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் வம்சத்தாரும் இணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  
  • தென்காசி பாண்டியர்கள் 18ம் நூற்றாண்டில் பலமாக இருந்த ஒரு தமிழ் பேசும் மறவர்கள் சமூகத்தினராக இருந்தனர். இவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனாலும் தென்காசி ஊரின் வரி வசூல் உரிமை பாண்டியர்களிடம் அப்போது இல்லை. இந்த உரிமை வடகரை ஜமீனிடம் இருந்திருக்கின்றது.
  • எந்த பாளையப்பட்டுக்களும் தாம் பாண்டியர் வம்சத்தவர்கள் என்று தங்கள் உரிமையைக் கோரவில்லை.
கங்கைகொண்டான் சீர்மை நாடாள்வார் என்கின்ற பட்டமுடைய நாடாட்சி மரபினர் வேறு, மறவர்கள் வேறு என்பது தெளிவு என்று உறுதிபடுத்துகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்.
ஏறக்குறைய 30 நிமிட ஒலிப்பதிவு இது. புதிய விஷயங்கள் தெளிவான ஆண்டு வாரியான தகவல்களை வழங்குகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்


பதிவும் படங்களும் :சுபாஷினி 
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011

பேரா.பா.ரா.சுப்பிரமணியனுடன் இலண்டனில் ஓர் உரையாடல்

கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதியின் பிரதம ஆசிரியர், மொழி அறக்கட்டளையின் Contemporary Tamil Prose Writer (with notes, translation and glossary), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சையின் ‘தமிழ் நடைக் கையேடு’ ஆகிய வெளியீடுகளுக்குக் காரணமாயிருக்கும் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள் 2012 ஏப்ரல்-மே மாதங்களில் லண்டன் வருகை புரிந்தார். அது சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓர் நீண்ட கலந்துரையாடல் நடந்தது. அவைப் பகுதிகளாக கீழே வழங்கப்படுகின்றன:

பகுதி ஒன்று கேட்க!
பகுதி இரண்டு கேட்க!
பகுதி மூன்று கேட்க!
பகுதி நான்கு கேட்க!
பகுதி ஐந்து கேட்க!
பகுதி ஆறு கேட்க!

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness