ஐயனார் வழிபாடு




தமிழகமெங்குமன்றி தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கூட ஐயனார் வழிபாடு என்பது சிறப்புற்று வழக்கில் இருந்து வருகின்றது. இத் தெய்வத்தை பற்றி விளக்கும் ஒரு பேட்டி ஒலிப்பதிவே இன்றைய வெளியீட்டில் முதல் அங்கமாக வெளிவருகின்றது.

மலை வளம், ஆற்று வளம் நிறைந்த இடங்களிலும் கிராமப்புறங்களிலும் இத்தெய்வ வழிபாடு மிகப் பரவலாக இருந்து வருகின்றது. வீர வழிபாட்டை பிரதிபலிப்பதாகவும் ஐயனார் வழிபாடு வழக்கில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் வீரர்கள் பற்றிய செய்திகள் உள்ளன். ஐயனார் ஐயனாரப்பன் என்றும் அழைக்கப்படுவது வழக்கில் உள்ளது. கல்வெட்டுக்களில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்த ஆலயங்களில் ஐயனார் வழிபாடு சாஸ்தா என்று குறிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் சாஸ்தா ஆலயம் இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒன்று.

பண்டைய காலத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் முக்கிய இடம் பெற்றிருந்த தேவேந்திரன் வழிபாடு ஐயனார் வழிபாடாக மாற்றம் கொண்டதா? ஐயனாரின் தோற்றம் என்ன? இவற்றையெல்லாம் விவரிக்கின்றார் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி.

ஐயனார் வழிபாடு!


பதிவு: மார்ச் 2011
பதிவு செய்தவர்: சுபா 

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness