தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: பகுதி 2-5

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியின் சில பகுதிகள் தொடர்கின்றன.





பகுதி 2
எவ்வாறு கல்வெட்டுக்களை ஆய்வு செய்வது என்ற தனது பேச்சினை தொடர்கின்றார். பல்லவர்கள், பாண்டியவர்கள் கட்டிய கோவில்களின் கட்டுமானம் எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்று விளக்கமும் வருகின்றது இப்பதிவில். நிறைய கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கும் போது எல்லாவற்றையும் ஒரேவரிசையில் படித்து விட முடியாது. மாறாக ஒவ்வொன்றாகப் படியெடுத்து பின்னர் அவை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு அவையனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்று தமது ஆய்வுப் பணிகள் பற்றி குறிப்பிடுகின்றார் இப்பகுதியில்.


பகுதி 3
தஞ்சாவூர் தவிர்த்து செங்கல்பட்டு, வட ஆற்காடு பகுதிகளில் இவரது பணிகள் தொடர்ந்திருக்கின்றன. பொது மக்கள் கூட சில வேளைகளில் அவர்கள் ஊரிலுள்ள கல்வெட்டுக்களை வாசித்து படியெடுக்க இந்த ஆய்வாளர்களைக் கேட்டுகொள்வார்களாம். பொது மக்களின் ஈடுபாட்டைப் பற்றி மகிழ்ச்சியுடன் விவரிக்கின்றார் இப்பகுதியில்.

நன்னிலம் வட்டக் கல்வெட்டுக்கள் என்ற மூன்று தொகுதிகளை முழுதாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். அதனைப் பற்றிய குறிப்பும் இப்பகுதியில் வருகின்றது.


பகுதி 4

திருவெள்ளிமழலை என்னும் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு ராஜராஜனின் கல்வெட்டுக்கள் மட்டுமே 108 கல்வெட்டுக்களுக்கும் மேல் உள்ளன என்று குறிப்பிடுகின்றார்.
கும்பகோணம் கல்வெட்டுக்கள், பாபனாசம் கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன.

பொது மக்களே இவர்களை அன்புடன் உபசரித்து இவர்களை வரவேற்பார்களாம். சைக்கிளில் செல்லும் இவர்களைப் பார்த்து முதலில் சர்க்கஸ் போட வந்தார்களா என்று கேட்பார்களாம். பின்னர் உண்மை விஷயம் அறிந்து கொண்ட பின்னர் பொது மக்களும் இவர்களை அன்புடன் உபசரித்து தாங்களும் இவர்களுக்கு ஏதாவது உதவ முடிந்த வகையில் உதவுவார்களாம். இவ்வகை சுவாரசியமான செய்திகளை இப்பகுதியில் பகிர்ந்து கொள்கின்றார்.


பகுதி 5
முன்னர் இவர்கள் காலத்தில் கல்வெட்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட விதத்திற்கும் தற்போது எவ்வாறு இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றும் இந்தப் பகுதியில் குறிப்பிடுகின்றார். முன்னர் இந்த ஆய்வாளர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வுகள் நிகழ்த்தியிருக்கின்றனர். தற்சமயம் அந்த அளவிற்கான் ஆர்வம் குறைந்திருப்பதாகவே இவர் தெரிவிக்கின்றார்.


கல்வெட்டு பயிற்சி நிறுவனத்தின் செயல்பாடுகள்.
தொல்லியல் துறை அறிஞர்.டாக்டர்.இரா.நாகசாமி இவரது வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். தமிழ் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபடுவது மேலும் சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு தொல்லியல் ஆய்வுத் துறையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்

தமிழிலக்கியத்துக்கும் கல்வெட்டுக்களுக்கும் தொல்லியல் ஆய்விற்கும் நல்ல தொடர்புபுள்ளது என்றும், கருவூர், மதுரை, பூம்புகார், தஞ்சை போன்ற இடங்கள் இலக்கிய பிரசித்தி பெற்றதனாலும் இங்கு பெரும்பாலும் ஆய்வுகள் தொடரப்படுவதற்கு காரணமாக் அமைகின்றன என்றும் இப்பகுதியில் நம்முடன் தகவல் பகிர்ந்து கொள்கின்றார்.

இப்பேட்டிகளை கேட்க:
-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி வெளியீடுகள்



1.விநாயகர் அகவல்





2010 தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த திரு. தமிழ்த்தேனி அவர்கள் ஆழ்கடலைவிட ஆழமான இந்த எளிய இலக்கியத்தை பதிவு செய்து அளித்துள்ளார். விநாயகர் அகவல், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சங்கப் புலவர்களுள் ஒருவரான, குழந்தை இலக்கியத்தில் புதுமை கண்ட ஔவைப்பாட்டி இயற்றியது. அது இயற்றப்பட்ட சூழ் நிலையையும் அழகாக விளக்கியிருக்கிறார் தமிழ்த்தேனியார். தமிழகத்தின் முழுமுதற் கடவுளின் அருட்பார்வை இந்த தீபாவளித் திருநாள் முதல் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்கட்டும்.



2. ஆத்திச்சூடி




ஔவை இயற்றிய பற்பல நூல்களில் முதன்மையானது ஆத்திச்சூடி. எளிமையான, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய சின்னஞ்சிறிய வாக்கியங்களாக அமைந்திருக்கும் இவ்விலக்கியம் 108 வாக்கியங்களைக் கொண்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் கற்றுப் பின்பற்ற வேண்டிய இந்த உரையை, 2010 தீபாவளிக்காக, நமக்காக தொகுத்தளிப்பவர், ஈரோட்டைச் சேர்ந்த திருமதி. பவள சங்கரி. குழந்தை இலக்கியமல்லவா! இயல்பான பேச்சு நடையில் அவர்களுக்காகவே இதை வெளியிட்டிருக்கிறார்.









3. இனிக்கும் இலக்கியம்: குழந்தை

நற்றிணைப்பாடல் பெங்களூரைச் திருமதி. ஷைலஜாவின் இலக்கிய ஆர்வம் நாம் நன்கு அறிந்ததே. அவர் தன் மனங்கவர்ந்த இலக்கியங்களை, ‘இனிக்கும் இலக்கியம்” என்று தொடராக வழங்குகிறார்”. 2010 தீபாவளிக்காக, இந்த இணைப்பில், குழந்தையைப் பற்றிய ஒரு நற்றிணைப் பாடலை விளக்குகிறார்.








4. இனிக்கும் இலக்கியம்: காதல்

முத்தொள்ளாயிரம் தமிழ் மரபில் வீரமும் காதலும் முக்கியத்துவம் பெற்றவை. தூய்மையான காதலைப்பற்றிய இலக்கியங்கள் அனேகம். தன் “இனிக்கும் இலக்கியம்” தொடரின் பகுதியாக, முத்தொள்ளாயிரத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி. ஷைலஜா. 2010, தீபாவளித் திருநாளை ஒட்டி வெளியிடப்படும் இந்தப் பதிவில் அவர் கவிதாயினி மதுமிதாவின் ஒரு புதுக்கவிதையையும் பகிர்ந்து கொள்கிறார்.










கடலோடியின் கம்போடிய நிகழ்வுகள்: நூல் விமர்சனம் - முனைவர்.க. சுபாஷிணி

கடலோடியின் கம்போடிய நிகழ்வுகள்: நூல் விமர்சனம்.
நூலாசிரியர்: கடலோடி நரசய்யா

வழங்குபவர்: சுபாஷினி



-:நூல் விமர்சனம்

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: 1 - முனைவர் பத்மாவதி

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியின் முதல் பகுதி.

இந்த ஒலிப்பதிவில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன.
1) அறிமுகம் - இப்பகுதியில் தனது தற்போதைய பணிகள் பற்றி விளக்குகின்றார். அத்துடன் தான் தற்போது பிரத்தியேகமாக மேற்கொண்டுள்ள களப்பிரர் வரலாறு பற்றிய நூல் பணிகள் பற்றிய சிறு விளக்கமும் வருகின்றது. 1940ல் முதலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடு கிபி.8ம் நூற்றாண்டின் முற்பகுதியைக் களப்பரர் அரச வம்சம் ஆண்ட செய்திகள் பின்னர் அது பற்றி தொடரப்பட்ட ஆய்வுகள் தனது தற்போதைய பணிகள் என்று செல்கின்றது இப்பகுதி.

2) பனியில் சேர்ந்த பொழுது முதலில் இவருக்கு ஆய்வுக்கு வழங்கப்பட்ட ஊர் தஞ்சை. இங்கு தான் மேற்கொண்ட பணியைப் பற்றி விளக்குகின்றார். குழுவாக பணியை எப்படி ஆய்வாளர்கள் மேற்கொள்வர் என்று விளக்குகின்றார். கல்வெட்டுக்கள் ஆய்வுகள் செய்யும் வழிமுறைகள், எழுத்துக்களைக் கண்டு பிடிக்கும் முறை, எழுத்துக்களை கையாளும் முறை.
என சரளமாக தனது அனுபவங்களை வழங்குகின்றார்.





-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள் - 1

ஒலிப்பதிவு செய்தவர்: சுபா (28-06-2010)

கடல் வணிகம் - ஒரிசா பாலு

இப்பேட்டியில்:
-கடல் ஆய்வுகளைப் பற்றிய பொது விளக்கம்.
-பாப்புவா நியுகினி நாட்டில் தமிழ் சொற்களைப் பற்றிய சில செய்திகள்
-கடல் வணிகம்..
-கடல் ஆமைகளின் பங்கு..

போன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன.




-:கடல் வணிகம்


பேட்டி கண்டவர்: சுபாஷினி 

தமிழகத்தில் பெண்கள் - நாகசாமி

பொது வாழ்வில் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கின்றது என்பதை பற்றி தனது கருத்துக்களைச் சொல்வதாக இந்த பேட்டி ஆரம்பிக்கின்றது. அதிலிருந்து அரசர்களின் காலத்திற்குச் செல்கின்றார் முனைவர்.நாகசாமி.

இராஜராஜனின் தலைமை தேவியான லோகமகாதேவி தஞ்சாவூரில் இராஜராஜன் பெருங்கோயிலை கோயிலைக் கட்டிமுடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பெயரிலேயே லோகமகாதேவீச்வரம் என்ற கோயிலை கட்டி அதற்கு தனது பெயரையே சூட்டியிருக்கின்றார்.

திருவையாற்றிலே அவர் பெயரால் இந்தக் கோயில் கட்டியிருக்கின்றார். அதற்கு லோகமகாதேவீச்வரம் என்று பெயரும் சூட்டியிருக்கின்றார். இது அரசன் கட்டியதல்ல. மாறாக அரசியே கட்டியது. அந்தக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதற்குச் சான்றாக அமைந்திருக்கின்றது. "திருவையாற்றுப்பால் நாமெடுப்பித்த லோகமகாதேவிச்வரமுடையாருக்கு நாம் கொடுத்தன கல்லில் வெட்டு" என்ற அரசியே ஆணையிட்டுக் கொடுத்தது குறிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பொதுவாக கோயில்களில் அதிகாரிகளாகவும் தலைமை அதிகாரியாகவும் இருப்பவர்கள் ஆண்கள். ஆனால் அந்தக் கோயிலிலே தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் ஒரு பெண். குஞ்சரமல்லி என்று அவருக்கு பெயர். அவருக்குக் கீழே பணி புரிந்தோர் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும். குஞ்சரமல்லியிடம் ஆணை பெற்றுக் கொண்டு பணி புரிந்திருக்கின்றனர் என்ற இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது என்று குறிப்பிடுகின்றார்.

சோழர் காலத்திலே, குந்தவை பிராட்டியார் வணிகம் நடக்கும் இடத்தில் அதாவது ஏலம் போடுகின்ற இடத்திலே தனியாக நின்று அவர் வணிகம் பேசியதையும் இவர் குறிப்பிடுகின்றார்.

அதனால் பெண்கள் அதிகாரிகளாக இருந்தமைக்கானச் சான்றுகள் இருக்கின்றன என்று இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.
பெண்கள் அரசிகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கின்ரார்களா என்பதற்கும் சில உதாரணங்கள் வருகின்றன இந்தப் பேட்டியில். ஆண்கள் அரசாட்சி செய்த போது என்னென்ன அதிகாரங்களெல்லாம் கொடுக்கபப்ட்டிருந்தனவோ அத்தனை அதிகாரங்களும் பெற்று பெண் அரசியர் ஆட்சி செய்திருக்கின்றனர். மதுரையில் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ராணி மங்கம்மாள் தனி அரசியாக இருந்திருக்கின்றார். அவளது காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த ராணியின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதன் மேல் தெலுங்கிலும் தமிழிலும் மஹாராஜராஜ ஸ்ரீ ராணி மங்கம்மா என்று குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது .

அவருக்குப் பின்னர் வந்தவர் மீனாட்சி. முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கன் என்பரின் மனைவி. இவர் தனியாட்சி புரிந்திருக்கின்றார் என்றும் குறிப்பிடுகின்றார்.

பெண்கள் தனியாட்சி செய்தவர்களாக, வணிகம் செய்தவர்களாக, அதிகாரிகளாக தங்கள் பெயரிலேயே தானம் செய்தவர்களாக, அரசனுக்குரிய சம உரிமை உடையவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்றார்.

தனது பேச்சினைப் பாரதியின் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவொம் என்று கூறி முடிக்கின்றார். கேட்டுப் பாருங்கள்.





-:தமிழகத்தில் பெண்கள்


பேட்டி கண்டவர்: சுபாஷினி .

தஞ்சை பெருங்கோயில் விளக்கம் - 2

தஞ்சை பெருங்கோயில் விளக்கம்

தஞ்சைப் பெரிய கோயிலின் கோட்டைச் சுவர், வாயில் மற்றும் அதன் வளைவு மண்டபம் ஆகியவற்றை முதல் பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள பகுதிகளைப் பற்றிய விளக்கம் இப்பகுதியில் தொடர்கின்றது.

பேட்டியைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இப்பகுதிக்குச் செல்லவும்!

திரு. நரசய்யா - வலங்கை இடங்கை வேறுபாடுகள்

திரு.நரசய்யா

ரோஜா முத்தையா நூலகத்தில் 18-08-201o திரு நரசய்யா அவர்கள் "சென்னை நகரத்தில் இடங்கை, வலங்கை" என்ற தலைப்பில் வழங்கிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

உரையைக் கேட்க

சமர்ப்பணா

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளுக்காகத் தமிழகம் சென்று வந்த போது பல்வகைப்பட்ட அனுபவங்கள் எனக்கு அமைந்தன. திட்டமிட்டு ஏற்பாடு செய்து நான் சென்று வந்த இடங்கள் சில. திட்டமிடாமலேயே திடீரென அமைந்த சில எதிர்பாராத பயணங்களும் சில. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சமர்ப்பணாவில் நான் இருந்த சில மணி நேரங்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை செயலாளர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்கள் நிச்சயமாக நான் பார்த்து வர வேண்டிய ஒன்று என்று கூறி அவர் துணைவியார் ஸ்டெல்லாவுடன் மூவருமாகச் சென்றிருந்தோம். கொளத்தூர் பகுதியில் இந்த இல்லம் இருக்கின்றது.

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும் பெரியவர்களும் இங்கு வசிக்கின்றனர். ஏறக்குறைய 50 பேர்.

நேர்த்தியான கட்டிடம். தூய்மையாக அழகாகப் பராமரிக்கபப்டுகின்றது. நாங்கள் சென்ற போது எங்கள் வருகைப் பற்றி அவர்களுக்கு அறிவிக்கவுமில்லை .திடீரென்று சென்றிருந்தோம். குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அழகான சூழலில் நல்ல சிறிய தோட்டமும் இருக்கின்றது. சிறிது நேரம் இல்லத்தையும் அங்கு வசிப்பவர்களுடனும் பேசிக் கொண்டிருந்த பின்னர் பவானி அவர்களிடம் இந்த இல்லம் எப்படி உருவானது என்று கேட்டு அதனை ஒலிப்பதிவு செய்தேன்.

(ஒவ்வொரு பதிவும் ~5 நிமிடங்கள்)

பகுதி 1
- எவ்வகையான குழந்தைகள் இப்படிப்பட்ட இல்லங்களில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
- திருமதி.பவானி அவரது கணவர் திரு.ஸ்ரீதர் இருவரது கல்வி மற்றும் பயிற்சி அனுபவம்
- சம்ர்ப்பணா உருவான கதை


பகுதி 2
- மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளோடு பிரச்சனையுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகளும் இப்போது இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
- எவ்வகையான பயிற்சிகள், பள்ளிக் கல்வி இங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
- குழந்தைகளின் ஒரு நாள் முழுமைக்குமான நடவடிக்கைகள்

பகுதி 3

- இங்குள்ள ஊழியர்கள், பணிகள், அவர்களுக்கான சம்பளம் பற்றிய தகவல்கள்
- சில மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றி குறிப்பிடத்தக்க சில நோயின்
தன்மைகள், குழந்தைகளின் உடல் நிலை, அவர்களுக்கேற்ற பிரத்தியேகப் பயிற்சிகள் பற்றி விவரிக்கின்றார்.

பகுதி 4
- இல்லக் கட்டிடத்தை பற்றி
- உணவு தயாரிப்பு, நன்கொடைகள் பற்றி இப்பகுதியில் விவரிக்கின்றார்.


பகுதி 5

- எப்படி பலர் சமர்ப்பணா நிறுவன வளர்ச்சிக்கு உதவினார்கள் என்று விவரிக்கின்றார். திரு.ஆண்டோ பீட்டரை பற்றி சில செய்திகள் பகிர்ந்து கொள்கின்றார்

- பல திட்டங்கள் இப்போது உருவாக்கத்தில் இருப்பது பற்றியும் இத்திட்டங்களின் செயல் நடவடிக்கைகளைப் பற்றியும் விவரிக்கின்றார்.

இந்த இல்லத்திற்குச் சென்று வந்தது எந்த சோகமான சிந்தனையையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. மகிழ்ச்சியான ஒரு சூழலை நான் அங்கு உணர்ந்தேன். இந்த இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளும் பெரியவர்களும் உடல் பலகீனம் என்பதை மறந்து சந்தோஷமான உரையாடல்கள், விளையாட்டு என அவர்கள் நேரத்தை செலவிடுவதை நான் அங்கிருந்த சில மணி நேரங்களில் பார்க்க முடிந்தது. பவானியும் அவர் கணவரும் தோழமையுடன் வந்திருப்பவர்களையும் அங்கு வசிப்பவர்களையும் கவனித்துக் கொள்வதைப் பார்த்த போது பாராட்டாமல் இருக்க முடியும்.

மூளை வளர்ச்சி குன்றிய மனிதர்களை சக மனிதர்களாகப் பாவித்து அவர்களையும் நம்மோடு இணைத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு என்றே நான் கருதுகிறேன். பொருளாதார நன்கொடை என்பது ஒரு புறமிருக்கட்டும்.அவ்வப்போது புதிய மனிதர்கள் இந்த இல்லத்திற்கு வந்து பிறந்த நாள், திருமண நாள் என மகிழ்ச்சியான சில தினங்களை இந்த இல்லத்தில் வசிப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமே.

சமர்ப்பணா நிறுவனர்களில் ஒருவரான பவானியுடனான பேட்டிக்குப் பிறகு அங்கிருந்து அனைவருடனும் பேசி மகிழ்ந்தோம். திரு.ஆண்டோவின் துணைவியார் ஸ்டெல்லா இங்கு தொடர்ந்து வருவதால் அவருடன் இங்குள்ள சில பெண்கள் நல்ல நட்புடன் பழகுகின்றனர். அவர்களில் லஷ்மியும் ஒருவர். அவருக்கு ஏறக்குறைய 55 வயதிருக்கலாம். மூளை வளர்ச்சி குன்றியவர் தான் இவரும். அவரோடு ஸ்டெல்லா பேசிக் கொண்டிருப்பதை கொஞ்சம் பதிவு செய்திருந்தேன். மிகச் சிறிய சுவையான அந்தப் பதிவின் ஒலிப்பதிவும் இணைக்கப்பட்டுள்ளது. கேட்டுப் பாருங்கள்.


இறுதியாக பள்ளியில் படிக்கும் ஒரு சிறிய மாணவன் ஒருவன் பவானி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றான். பயிற்சியின் மூலம் இக்குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட முடியும் என்பதை இவர்களது முயற்சிகள் நிரூபிக்கின்றன.

தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் தமிழகம் செல்லும் மின்தமிழ் நண்பர்களும் இந்த இல்லத்திற்குச் சென்று இங்கு வசிப்பவர்களைச் சந்தித்து வாருங்கள். உங்கள் வருகை இவர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும்.

சில புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

சமர்ப்பணா தொடர்பு முகவரி:
Samarpana
Home for Mentaly challenged and Spastics
Plot No.10. Subramani Nagar
Vinayakapuram, Near Rettaieri
Kolathur Post
Chennai - 600 099
Tamil Nadu
Phone: 65255052; cell : 928211830, 9444189133
Email: samarpana@yahoo.com

மூலிகைமணி கண்ணப்பரின் சித்த மருத்துவமுயற்சிகள் - II

கடந்த மாத வெளியீட்டில் மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள் முயற்சியில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ முயற்சிகளை விளக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியை இம்மாத பதிவுகளில் கேட்கலாம்.

மேலும் சில படங்களும் பதிவுகளின் விளக்கங்களும் இப்பகுதியில்
உள்ளன.


பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.அ.சுகுமாரன், சுபாஷினி




-:பகுதி 7
-:பகுதி 8
-:பகுதி 9
-:பகுதி 10
-:பகுதி 11
-:பகுதி 12
-:பகுதி 13
-:பகுதி 14
-:பகுதி 15


பேட்டி ஒலிப்பதிவு: முனைவர்.க. சுபாஷிணி .

தமிழ்த்தேனீ கவிதை


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


சுந்தரத்தமிழ்

மூலிகைமணி கண்ணப்பரின் சித்த மருத்துவமுயற்சிகள்

மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள் முயற்சியில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ முயற்சிகளை இந்தப் பேட்டிகளில் விவரிக்கின்றார். மேலும் சில் படங்களும் விளக்கங்களும் இப்பகுதியில்
உள்ளன.


பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.அ.சுகுமாரன், முனைவர்.க. சுபாஷிணி





-:பகுதி 1
-:பகுதி 2
-:பகுதி 3
-:பகுதி 4
-:பகுதி 5
-:பகுதி 6




பேட்டி ஒலிப்பதிவு: முனைவர்.க. சுபாஷிணி.

சந்தக்கவிமரபு

திரு சந்தக்கவி ராமஸ்வாமி அவர்கள் தமிழிலும்,வடமொழியிலும் உள்ள சந்தங்களை ஆய்வு செய்து, அதை நிகழ்த்து கலை மாதிரியாக ஒரு பத்து சந்தங்களைப்பாடி, ஒப்பீடு காட்டி இங்கு அளிக்கிறார். இது குறித்து அவர் திரு.ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் படி கீழே உள்ளது. அதில் மேற்படி விவரங்களும் தனது செல்பேசி எண்ணும் தந்துள்ளார். இந்த அவரது முயற்சிக்கு ஆதரவு அளிக்க எண்ணுவோர் அவரை நேரடியாகத்தொடர்பு கொள்ளவும்.முகவரி விவரங்கள்:

Mr Sandakkavi V S N Ramaswamy
23, Rohini Ramaniyam
West Adaiyavalainthan Street
Srirangam
Trichy 600006
cell 9790702214



தமிழ்



ஆங்கிலம்



இதுவொரு மின்தமிழ் குழுமப் பரிந்துரை!

கூத்து பட்டறை முத்துசாமி




தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் நவீன காலத்தில் நகர மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரும் பங்காற்றியவர்.


பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.மாலன், திரு.நரசய்யா, முனைவர்.க. சுபாஷிணி







-:பகுதி 1

-:பகுதி 2

-:பகுதி 3

-:பகுதி 4

-:பகுதி 5

-:பகுதி 6

-:பகுதி 7

-:பகுதி 8


பேட்டி ஒலிப்பதிவு: முனைவர்.க. சுபாஷிணி.

சிலை மீட்ட செம்மல் - முனைவர்.நாகசாமி

ஒரு தெய்வச் சிலை எவ்வாறு தமிழகத்திலிருந்து பலவாறு கை மாறி அயல் நாடுகளின் மியூசியங்களை அலங்கரிக்கின்றன என்பதை இந்த பேட்டி விளக்குகின்றது. ஸ்கோட்லண்ட் யார்ட் காவல் துறை ஈடுபட்டு அவர்களோடு தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி அவர்களுடைய ஆய்வுத் திறமையினால் எவ்வாறு லண்டன் மியூசியத்திலிருந்து இந்த சிலை இந்தியாவிற்கு திர்ரும்பியது என்பதை ஒரு சுவாரசியமான நாவலப் படிப்பது போல விளக்குவதைக் கேட்கலாம்.





-:சிலை மீட்ட செம்மல்


பேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.

வேர்களைத் தேடி - எஸ்.பாலசுப்ரமணியம் B+

கடல் வழி ஆய்வும் குமரிக் கண்ட வாலாறும் பற்றிய தனது ஆய்வுகளை எஸ்.பாலசுப்ரமணியம் B+ பகிர்ந்து கொள்கின்றார். வேர்களைத் தேடி இவர் மேற்கொள்ளும் முயற்சிகளை அறிமுகப்படுத்தும் பதிவாக இது அமைகின்றது.




-:வேர்களைத் தேடி


பேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.

நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும் - நெல்லை நெடுமாறன்

7-2-2010 அன்று சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் காலை பத்துமணிக்கு நடைபெற்ற
"நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்" என்கிற தலைப்பில் நெல்லை நெடுமாறன் ஆற்றிய உரையின் பதிவு இது.

-: நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்



பதிவு செய்து அனுப்பியவர்:யுகமாயினி சித்தன்.

பாரதியார் பாடல்கள்




-பாடல் 1: போராடக் கற்றுத் தந்தவர் யாரிங்கே?

-பாடல் 2: பச்சை மரகதப் பட்டு விரித்து படுத்து கிடக்குது இயற்கை

-பாடல் 3: மலையைக் குடைந்தெடுத்து

-பாடல் 4: கும்பிகளே ஓடிவந்து

-பாடல் 5: எட்டயபுரத்தானுக்கு


இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக சேகரித்து வழங்கியவர் திரு.ஆண்டோ பீட்டர்.

சங்கமம் 2010 நித்யஸ்ரீ பாடல்கள்





-பாடல் 1: உன்னைக் காண கண் கோடி வேண்டும்

-பாடல் 2: எங்கள் நாட்டுகெந்த நாடு ஈடு

-பாடல் 3: களைப்படைந்தால்

-பாடல் 4: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

-பாடல் 5: குறை ஒன்றும் இல்லை

-பாடல் 6: ஜனனி ஜனனி

-பாடல் 7: சாந்தி நிலவ வேண்டும்


இப்பாடல்களை ஒலிப்பதிவு செய்து வழங்கியவர்.திரு.சந்திரசேகரன்.

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness