Feb27,2017

வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 2



நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார்.  பதிவின் இரண்டாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது.

பதிவினைக் கேட்க செல்க !

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Feb25,2017

வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 1

நெல்லைச் சீமையின் வட்டார வழக்கு தமிழகத்தின் ஏனைய பிற பகுதிகளிலிருந்து வேறுபடுவது.
பல சொற்களை உள்ளூர் வாசிகளே கூட மறந்து விடும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கும் வேளையில் இந்த நிலத்திற்கே உரிய சிறப்பாம் இச்சொற்களை நாம் பதிந்து வைத்து அவற்றை கேட்டு மகிழ்வதும் சுவாரசியம் தானே?


அதிலும் நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் சுவைபட பேசுகின்றார். 10 நிமிட பதிவு முதல் பகுதியாக இன்று வெளியிடப்படுகின்றது.


நெல்லைத் தமிழ் கேட்க இங்கே அழுத்தவும்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Feb22,2017

நாட்டுப்புறக் கதைகள்



கொங்கு நாட்டு, நாட்டுப்புறக் கதை கேட்கலாமா?

நாட்டுப்புறக் கதைகள்

கொங்கு நாட்டு பழமொழிகள்!



கொங்கு நாட்டு பழமொழிகள் சுவை கூட்டுவதோடு சிந்தனைக்கும் விருந்தாகும். சுவைத்துப் பாருங்களேன், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் தமிழ்துறைப் பேராசிரியர், முனைவர் ஜோதி மணியின் இன்குரலில்.

https://soundcloud.com/thiru-arasu-10/tdqtzwe8lpgm

Feb10,2017

Avvaiyar - அவ்வையின் ஆத்திசூடி

Feb7,2017

கும்மிப் பாடல்கள்



‘செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பது ஆன்றோர் வாக்கு. கிராமப்புறங்களில் இப்பழமொழி எங்கனம் பொருந்தும் என்று ஐயப்படும் வகையில் அங்கு நின்றால் பாட்டு, அமர்ந்தால் பாட்டு, பணி செய்யும்போழ்தும், உறங்கும்போழ்தும், உண்ணும் போழ்தும் என சதாசர்வ காலங்களும் இசையுடனேயே வாழ்கிறார்கள். ‘ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையும் இதற்கொரு காரணம். அந்த வகையில் கும்மிப்பாடல் என்பது கிராமப்புற மக்களின் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கம் வகிப்பது. இது வெண்பாவின் வகையைச் சார்ந்தது. மகளிர் பலர் ஒன்றுகூடி கைகொட்டி விளையாடும் தருணங்களில் மகிழ்ந்து பாடுவதே கும்மிப் பாடல். இயற்கும்மி, ஒயிற் கும்மி, ஓரடிக் கும்மி என்பன கும்மியின் வகைகளாகும். குறிப்பாக பொங்கல் திருநாள் அன்று கிராமப்புறங்களில் இளம்பெண்கள் ஒன்று கூடி கும்மி கொட்டுவது வழக்கம். அதுவும் கொங்கு நாட்டு வட்டார மொழியில் கும்மிப்பாடல் கேட்பதென்றால் சுவைக்குச் சான்றும் வேண்டுமோ?

பாடல்களைப் பாடியுள்ளவர்கள் - திருமிகு ராதாமணி, திருமிகு. சீரங்காயி, நொச்சிக்காட்டுவலசு.






Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness