புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி கொ.மா.கோதாண்டம்

வணக்கம்.


தமிழ் இலக்கிய உலகத்துக்கு நன்கு அறிமுகமானவர் இராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள். மு.கு.ஜகந்நாதராஜா அவர்களைப் பற்றி அவரது நெருங்கிய நண்பரும் அவருக்குப் பின்னர் மணிமேகலை கலைமன்றத்தைத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வருபவருமான டாக்டர்.கொ..கோதண்டம் அவர்கள் வழங்கும் ஒரு சிறப்புப் பேட்டியைத் தாங்கி இம்மாத மண்ணின் குரல் ஒலிப்பதிவு இதழ் இப்பகுதியில்வெளிவருகின்றது.




குறிஞ்சிச் செல்வர் என்று சிறப்பித்து அழைக்கப்படும் டாக்டர். கொ.மா.கோதாண்டம் அவர்கள் தமிழில் குறிஞ்சி நிலம் பற்றியும், குறிப்பாக வன இயல், தாவரவியல், விலங்கியல் போன்ற துறைகளில் இலக்கியம் படைத்துள்ளவர். இதுவரை ஏறக்குரை 90 நூல்கள் இவரது படைப்புக்களாக வெளிவந்துள்ளன. புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்து ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி எழுதிய கட்டுரை ஒன்று தினமணியில் வெளிவந்துள்ளது. அதன் பதிவை நமது வலைப்பக்கத்தில் இங்கே காணலாம்.

இந்தப் பிரத்தியேக பேட்டியில் நமக்காக புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி தனது கருத்துக்களைப் இவர் பகிர்ந்து கொள்கின்றார்.

இம்மாத மண்ணின் குரல் வெளியீட்டில் இப்பேட்டி ஒலிப்பதிவின் இரண்டு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பதிவு கோப்புக்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 10 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.


பகுதி 1.

இப்பகுதியில் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் இலக்கியப் பணிகளை விவரிக்கின்றார் கொ.மா.கோதாண்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் வரலாற்றை தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் எழுதினார். கடின தெலுங்கில் அமைந்த அந்த நூலை புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். இந்த நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூலுக்க்கான சாகித்ய அக்காடமி பரிசு பெற்ற முதல் நூல் என்ற பெருமை பெற்றது என்றும் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா புறநானூறு முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களை தெலுங்கில் மொழி பெயர்த்தமை பற்றியும் விவரிக்கின்றார்.

பகுதி 2.

பூதலப்பட்டு ஸ்ரீ ராம ரெட்டி என்பவர் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை பெரியபுராணம் போன்ற தமிழ் காவியங்களை மொழிபெயர்த்திருக்கின்றார். அதற்குப் பிறகு யாரும் தமிழ் இலக்கியங்களை தெலுங்கில் மொழிபெயர்க்காத நிலையில் இவர் புறநானூற்றை தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பாலி மொழியறிவும் கொண்டிருந்தமையால் சில சமண பௌத்த நூல்களையும் தமிழிற்கு மொழி பெயர்த்துள்ளார்.

புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் இல்லத்தில் உள்ள ஜகந்நாதராஜா நூலகத்தில் அவரது அனைத்து நூல்களும், கையெழுத்துப் பிரதிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இப்பேட்டியில் இந்த நூலகத்தைப் பற்றியும் டாக்டர். கொ.மா.கோதாண்டம் விவரிக்கின்றார்.

மணிமேகலை காப்பியத்தில் அளப்பற்ற ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் புலவர் மு.கு.ஜகந்நாதரா அவர்கள் 1958-ஆம் ஆண்டில் ராஜபாளையத்தில் மணிமேகலை கலைமன்றத்தை உருவாக்கியிருக்கின்றார். இவரோடு டாக்டர். கொ.மா.கோதாண்டம் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து இக்கலைமன்றத்தின் வழியாக பல இளைஞர்களைப் பல்லாண்டுகளாக இலக்கியத்தில் ஈடுபட ஊக்கமளித்து வளர்த்து வந்திருக்கின்றனர். மணிமேகலை கலைமன்றத்தின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவற்றை தற்போது தலமைப் பொறுப்பில் இருந்து பல இலக்கியப் பணிகளைச் செய்து வருபவர் டாக்டர். கொ.மா.கோதாண்டம் அவர்கள்.

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைன் மண்ணின் குரலில் கேட்டு மகிழலாம்.

இப்பேட்டி கடந்த மார்ச் மாதம் நான் தமிழகத்திற்குச் சென்றிருந்த சமையம் நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்பேட்டியின் ஏனைய பகுதிகள் அடுத்தடுத்த மாத மண்ணின் குரலில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த பேட்டிக்கான ஏற்பாட்டில் உதவியவர்கள்: திருமதி.சீதாலஷ்மி, திருமதி.மதுமிதா மற்றும் அவர் கணவர், திரு.எஸ்.ராமச்சந்திரன், திரு.ரகுபதிராஜா ஆகியோர். அவர்களுக்கும் என்னுடன் துணையாக ராஜபாளையம் வந்திருந்து இவ்வொலிப்பதிவில் பங்கு கொண்ட திரு.திருமதி துரை அவர்களுக்கும் எனது நன்றி.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

இசக்கி அம்மன்

இசக்கி அம்மன் - விளக்கத்தை வழங்குபவர் டாக்டர்.பத்மாவதி: தமிழ் நாடு தொலியல் துறை

இரண்டு ஒலிப்பதிவுகள் உள்ளன.

அ. தமிழக கிராமப்புரங்களில் மக்களால் நம்பிக்கையுடன் வழிபடப்படும் தெய்வம் இசக்கி அம்மன். இந்த தெய்வத்தின் தன்மைகளை, எவ்வாறு இந்தத் தெய்வ வழிபாடு தமிழக மக்களின் வழிபாட்டு முறைகளில் கலந்தது என்பதை விளக்கும் ஒலிப்பதிவு முதலாவதாக இடம்பெறுகின்றது.

ஆ. அடுத்து, சமண சமயக் கதைகளைக் கூறும் ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்படும் யட்சியாம்பிகா, இசக்கி அம்மன் எனப்படும் தெய்வத்துடன் உள்ள தொடர்பினை இரண்டாவது ஒலிப்பதிவு விளக்குகின்றது.

இப்பேட்டிகளைக் கேட்கவும் இசக்கி அம்மன் கோயில் படங்களைக் காணவும் இங்கே செல்க!

இல்லத்து பிள்ளைமார் சமூகத்தினரும் நெசவுத் தொழில் தொடர்பான செய்திகளும்



தென் தமிழகத்தில் இல்லத்து பிள்ளைமார் என குறிப்பிடப்படும் குழுவினர் முன்னர் ஈழவர்கள் அல்லது நெசவு பணிக்கர்கள் என அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்சமயம் இச்சமூகத்தினர் நெசவுத் தொழிலில் ஈடுபடுவது குறைந்து விட்டது என்ற போதிலும் முன்னர் இவர்கள் சாணார்கள் (நாடார்கள்) எனப்படும் ஒரு சமூகத்தினருக்கு நெசவுத் தொழில் பணியில் ஈடுபட்டவர்களாக இருந்ததாக வரலாற்று, தொல்லியல் ஆய்வறிஞர் திரு.எஸ். ராமச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் இக்குழுவினர் சாணார் எனப்படும் (நாடார்கள்) சமூகத்தைச் சார்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பதற்கான சான்றுகள் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆவணங்களை ஆராயும் போது கிடைக்கப்பட்ட தகவலையும் குறிப்பிடுகின்றார்.

கான் சாஹீப் ஒரு இல்லத்துப் பிள்ளையார் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும்; கான் சாஹீப்பிற்கும் சாணார்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் எங்கே பிறந்தவர் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.

இவ்வொலிப்பதிவில் இறுதியாக நாலாட்டின் புதூர் பற்றிய சிறு தகவலும் வருகின்றது.

-பேட்டி !

கண்ணனின் கவிதை - அண்டகோளம்


நா.கண்ணன்


அண்டகோளம்..!

திருக்குறள் உரைகள் - நாகநந்தி (2)

திருக்குறள் உரைகள் - வழங்குபவர் மறைந்த பேராசிரியர் டி.வேணுகோபால் (நாகநந்தி)

இவ்வொலிப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காகச் சேகரித்து வழங்கியவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள்.

ஆனந்தம்.. ஆனந்தம்.. ஆனந்தமே!


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


ஆனந்தம்.. ஆனந்தம்.. ஆனந்தமே!

தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா


தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா சென்னையில் 13.03.2011 அன்று நிகழ்ந்தது. இவ்விழாவில் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இங்கே செல்க.



சைவ சித்தாந்தக் கருத்துக்கள் - 1



தருமபுர ஆதீன மடாதிபதியின் உரை. பண்களிலிருந்து ஆரம்பித்து, பின்னர், திருஞானசம்பந்தரைப் பற்றி பேசி பின்னர் சிவ சக்தி தத்துவத்தைப் பற்றி விளக்கி, மெய்கண்டாரின் தத்துவ விளக்கங்களையும் தொட்டு பேசுகின்றார். பின்னர் விரிவாக மாயை பற்றி விளக்கமளிக்கின்றார். மிக எளிமையாக இந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்த உரையாடலின் முதல் பகுதியை இன்று வெளியிடுகின்றேன். கேட்டு மகிழ்வோம்.
பேட்டி ஒலிப்பதிவு: சுபாஷினி 

கவிஞர் திருலோக சீதாராம்



கவிஞர் திருலோக சீதாராம் பற்றி திரு.மோகனரங்கன் உரையாற்றுகின்றார். இலக்கிய வானிலே மின்னல் எனத் தோன்றி மறைந்தவர் கவிஞர் திருலோக சீதாராம்.பாரதி பாடல்களைப் பட்டி தொட்டியெங்கும் பாடிப் பரப்பியவர் இவர். வெறும் கவிதை மட்டும் எழுதியவர் அல்ல; கவிஞனாகவே வாழ்ந்தவர் கவிஞர் திருலோக சீதாராம் என்கிறார் திரு.மோகனரங்கன். கவிஞர் திருலோக சீதாராம் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை இந்த உரையில் சுவைபட குறிப்பிடுகின்றார். அத்துடன் அவர் தம் கவிதையையும் வாசித்து அளிக்கின்றார். கேட்டு மகிழ்வோம்.

பாண்டியர்கள் காலத்தின் கடல் வணிகம்





ஒரிசா பாலுவுடனான் ஒரு கலந்துரையாடலின் இரண்டாம் பகுதி இது. பாண்டியர்கள் குறிப்பாக சங்க இலக்கியம் சொன்ன வரலாற்றுச் செய்திகளைப் பற்றி கூறி இப்பகுதியை ஆரம்பிக்கின்றார்.பாண்டியர்கள் ரோமனியப் பேரரசு வரை சென்றிருக்கின்றனர். அரபு வணிகர்கள் கடல் பயணம் பற்றிய தகவல்கள், இந்தியாவிலிருந்து கடல் வணிகம்,என்பது குறிப்பாக வைரம், நவரத்தினம், மிளகு ஆகியவற்றிஐ அடிப்ப்டையாகக் கொண்டது; கடல் வணிகம் என்னும் போது கப்பல் கட்டும் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்கியிருந்தமை பற்றியும் விளக்குகின்றார். -:இப்பகுதியைக் கேட்க!

பேட்டி கண்டவர்: சுபாஷினி .(June, 2010)

புதிய தமிழ் வாழ்த்து

மலேசிய எழுத்தாளர் சங்கம் ஜனவரி 23ம் தேதி வெளியிட்டுள்ள புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.








நிலைபெறநீ வாழியவே!
ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!

வெளியீட்டு விழாப்படங்கள் காண இங்கே சொடுக்குக!

பாடல் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சொடுக்குக!

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: பகுதி 6-7

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியின் சில பகுதிகள் தொடர்கின்றன.





பகுதி 6
பயிற்சிகளின் போது எப்படி கல்வெட்டுக்களை வாசிப்பது, எந்த சிலைகள் எந்த தெய்வங்களின் வடிவங்கள் என சிலைகளைப் பார்த்து கண்டுபிடிப்பது போன்ற விஷயங்களை எப்படித் தெரிந்து கொள்வது போன்ற சில தகவல்கள் இப்பகுதியில் வழங்கப்படுகின்றன. இவர்களின் ஆய்வுக் குழுவினருக்கு ஈconography எனப்படும் ஆய்வு முறையை அறிந்து கொள்வதற்கு டாக்டர்.நாகசாமி வழங்கிய பயிற்சிகள் உதவியிருக்கின்றன.
தேவநாகரி, வட்டெழுத்து, கிரந்தம் இவை அனைத்திலும் தீவிர பயிற்சி இவர்களுக்கு கிடைத்திருந்ததால் கல்வெட்டுக்களைப் பார்த்ததுமே கண்டுபிடிக்கும் திறன் வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்.

ஒரு கோயிலைப் பார்க்கும் போதே அதில் உள்ள விக்கிரகங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவை இந்த கோயிலை சார்ந்தவைதானா என்பதை உடனே அறிந்து கொள்ளும் திறனும் அனுபவத்தின் மூலம் கிடைத்திருக்கீன்றது.

ஒரு கோயிலின் கட்டிட அமைப்பு எப்படி அமைந்திருக்கும் என்ற விளக்கமும் இப்பகுதியில் வழங்கப்படுகின்றது. இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.


பகுதி 7
ஆதித்த சோழன், பராந்தக சோழன் போன்ற மாமன்னர்களின் கட்டிடக் கலை சிலை அமைப்புக்கள் போன்றவற்றை நேரடியாக பார்த்து எவ்வாறு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்கள் பாடம் நடத்துவார் என்று இப்பகுதியில் விளக்குகின்றார்.
சோழர் காலத்து சிலைகளுக்கும், நாயக்கர் கால சிலைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை எப்படி கண்டு பிடிப்பது என்று விளக்குகின்றார்.

தனது ஆய்வுப் பணிகளின் ஆரம்ப காலகட்டங்களில் எளிமையான வடிவங்களான ஸ்ப்த கண்ணிகளை அடையாளம் காண்பதை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தையும் பின்னர் மிக எளிமையாக எல்லாவிதமான கலை வடிவங்களின் வேறுபாடுகளை தெரிந்து கொண்ட விதத்தையும் கூட விளக்குகின்றார். இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.

இப்பேட்டிகளை கேட்க:
-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்

திருக்குறள் உரைகள் - நாகநந்தி

திருக்குறள் உரைகள் - வழங்குபவர் மறைந்த பேராசிரியர் டி.வேணுகோபால் (நாகநந்தி)

இவ்வொலிப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காகச் சேகரித்து வழங்கியவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள்.

-:பகுதி 1
-:பகுதி 2
-:பகுதி 3
-:பகுதி 4

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: பகுதி 2-5

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியின் சில பகுதிகள் தொடர்கின்றன.





பகுதி 2
எவ்வாறு கல்வெட்டுக்களை ஆய்வு செய்வது என்ற தனது பேச்சினை தொடர்கின்றார். பல்லவர்கள், பாண்டியவர்கள் கட்டிய கோவில்களின் கட்டுமானம் எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்று விளக்கமும் வருகின்றது இப்பதிவில். நிறைய கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கும் போது எல்லாவற்றையும் ஒரேவரிசையில் படித்து விட முடியாது. மாறாக ஒவ்வொன்றாகப் படியெடுத்து பின்னர் அவை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு அவையனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்று தமது ஆய்வுப் பணிகள் பற்றி குறிப்பிடுகின்றார் இப்பகுதியில்.


பகுதி 3
தஞ்சாவூர் தவிர்த்து செங்கல்பட்டு, வட ஆற்காடு பகுதிகளில் இவரது பணிகள் தொடர்ந்திருக்கின்றன. பொது மக்கள் கூட சில வேளைகளில் அவர்கள் ஊரிலுள்ள கல்வெட்டுக்களை வாசித்து படியெடுக்க இந்த ஆய்வாளர்களைக் கேட்டுகொள்வார்களாம். பொது மக்களின் ஈடுபாட்டைப் பற்றி மகிழ்ச்சியுடன் விவரிக்கின்றார் இப்பகுதியில்.

நன்னிலம் வட்டக் கல்வெட்டுக்கள் என்ற மூன்று தொகுதிகளை முழுதாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். அதனைப் பற்றிய குறிப்பும் இப்பகுதியில் வருகின்றது.


பகுதி 4

திருவெள்ளிமழலை என்னும் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு ராஜராஜனின் கல்வெட்டுக்கள் மட்டுமே 108 கல்வெட்டுக்களுக்கும் மேல் உள்ளன என்று குறிப்பிடுகின்றார்.
கும்பகோணம் கல்வெட்டுக்கள், பாபனாசம் கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன.

பொது மக்களே இவர்களை அன்புடன் உபசரித்து இவர்களை வரவேற்பார்களாம். சைக்கிளில் செல்லும் இவர்களைப் பார்த்து முதலில் சர்க்கஸ் போட வந்தார்களா என்று கேட்பார்களாம். பின்னர் உண்மை விஷயம் அறிந்து கொண்ட பின்னர் பொது மக்களும் இவர்களை அன்புடன் உபசரித்து தாங்களும் இவர்களுக்கு ஏதாவது உதவ முடிந்த வகையில் உதவுவார்களாம். இவ்வகை சுவாரசியமான செய்திகளை இப்பகுதியில் பகிர்ந்து கொள்கின்றார்.


பகுதி 5
முன்னர் இவர்கள் காலத்தில் கல்வெட்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட விதத்திற்கும் தற்போது எவ்வாறு இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றும் இந்தப் பகுதியில் குறிப்பிடுகின்றார். முன்னர் இந்த ஆய்வாளர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வுகள் நிகழ்த்தியிருக்கின்றனர். தற்சமயம் அந்த அளவிற்கான் ஆர்வம் குறைந்திருப்பதாகவே இவர் தெரிவிக்கின்றார்.


கல்வெட்டு பயிற்சி நிறுவனத்தின் செயல்பாடுகள்.
தொல்லியல் துறை அறிஞர்.டாக்டர்.இரா.நாகசாமி இவரது வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். தமிழ் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபடுவது மேலும் சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு தொல்லியல் ஆய்வுத் துறையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்

தமிழிலக்கியத்துக்கும் கல்வெட்டுக்களுக்கும் தொல்லியல் ஆய்விற்கும் நல்ல தொடர்புபுள்ளது என்றும், கருவூர், மதுரை, பூம்புகார், தஞ்சை போன்ற இடங்கள் இலக்கிய பிரசித்தி பெற்றதனாலும் இங்கு பெரும்பாலும் ஆய்வுகள் தொடரப்படுவதற்கு காரணமாக் அமைகின்றன என்றும் இப்பகுதியில் நம்முடன் தகவல் பகிர்ந்து கொள்கின்றார்.

இப்பேட்டிகளை கேட்க:
-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி வெளியீடுகள்



1.விநாயகர் அகவல்





2010 தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த திரு. தமிழ்த்தேனி அவர்கள் ஆழ்கடலைவிட ஆழமான இந்த எளிய இலக்கியத்தை பதிவு செய்து அளித்துள்ளார். விநாயகர் அகவல், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சங்கப் புலவர்களுள் ஒருவரான, குழந்தை இலக்கியத்தில் புதுமை கண்ட ஔவைப்பாட்டி இயற்றியது. அது இயற்றப்பட்ட சூழ் நிலையையும் அழகாக விளக்கியிருக்கிறார் தமிழ்த்தேனியார். தமிழகத்தின் முழுமுதற் கடவுளின் அருட்பார்வை இந்த தீபாவளித் திருநாள் முதல் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்கட்டும்.



2. ஆத்திச்சூடி




ஔவை இயற்றிய பற்பல நூல்களில் முதன்மையானது ஆத்திச்சூடி. எளிமையான, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய சின்னஞ்சிறிய வாக்கியங்களாக அமைந்திருக்கும் இவ்விலக்கியம் 108 வாக்கியங்களைக் கொண்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் கற்றுப் பின்பற்ற வேண்டிய இந்த உரையை, 2010 தீபாவளிக்காக, நமக்காக தொகுத்தளிப்பவர், ஈரோட்டைச் சேர்ந்த திருமதி. பவள சங்கரி. குழந்தை இலக்கியமல்லவா! இயல்பான பேச்சு நடையில் அவர்களுக்காகவே இதை வெளியிட்டிருக்கிறார்.









3. இனிக்கும் இலக்கியம்: குழந்தை

நற்றிணைப்பாடல் பெங்களூரைச் திருமதி. ஷைலஜாவின் இலக்கிய ஆர்வம் நாம் நன்கு அறிந்ததே. அவர் தன் மனங்கவர்ந்த இலக்கியங்களை, ‘இனிக்கும் இலக்கியம்” என்று தொடராக வழங்குகிறார்”. 2010 தீபாவளிக்காக, இந்த இணைப்பில், குழந்தையைப் பற்றிய ஒரு நற்றிணைப் பாடலை விளக்குகிறார்.








4. இனிக்கும் இலக்கியம்: காதல்

முத்தொள்ளாயிரம் தமிழ் மரபில் வீரமும் காதலும் முக்கியத்துவம் பெற்றவை. தூய்மையான காதலைப்பற்றிய இலக்கியங்கள் அனேகம். தன் “இனிக்கும் இலக்கியம்” தொடரின் பகுதியாக, முத்தொள்ளாயிரத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி. ஷைலஜா. 2010, தீபாவளித் திருநாளை ஒட்டி வெளியிடப்படும் இந்தப் பதிவில் அவர் கவிதாயினி மதுமிதாவின் ஒரு புதுக்கவிதையையும் பகிர்ந்து கொள்கிறார்.










Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness