களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள்

நண்பர்களே,

இம்மாத மண்ணின் குரலை தமிழக வரலாற்றுப் பதிவு ஒன்றுடன் தொடங்குவதில் மகிழ்கிறேன். அண்மையில் டாக்டர் பத்மாவதி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்த போது அவரது தற்போதைய ஆய்வாக அமைந்திருக்கும் களப்பிரர்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். இவரது ஆய்வு முழுமை பெற்று புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நூல் வெளியீடு காண்பதற்கு முன்னரே அவருடன் இந்த ஆய்வு குறித்த தகவலை நமது மண்ணின் குரல் பதிவுக்காக ஒலிப்பதிவு செய்து வந்தேன். அந்த ஒலிப்பதிவின் இரண்டு பகுதிகள் இந்த மாத வெளியீட்டில் இடம் பெறுகின்றன. இதன் தொடர்ச்சி அடுத்த மாதமும் தொடரும்.




பகுதி 1
களப்பிரர் காலம் என்பதை நிர்ணயிப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கி.பி.3 முதல் கி.பி 6 வரை களப்பிரர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் இருந்தது என்பதை சற்று உறுதியாகக் கூறலாம். களப்பிரர்கள் எங்கிருந்து வந்து இங்கே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான்றுகள் மிக மிகக் குறைவாக இருந்ததாலும் இந்தக் கால கட்டத்தை நிர்ணயிப்பதில் உதவுவதாக அமைவது 1940ல் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த வேள்விக் குடி செப்பேடு. இந்தச் செப்பேட்டில் தான் களப்பரர் எனப்படுபவர்கள் தமிழ் மண்ணில் அச்சமயம் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்கள் பலரை துரத்தி விட்டு ஆட்சி செய்யத் தொடங்கினர் என்ற செய்திகள் கிடைக்கத் தொடங்கின.

பெரிய புராணத்தில் வருகின்ற சில நாயன்மார்கள் புராணங்களில் உள்ள செய்திகள், யாப்பெருங்கல விருத்தி போன்றவை களப்பிர மன்னன் அச்சுத விக்கந்தன் என்பவன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான் என்பதை குறிக்கின்றன. இதுவரை கிடைத்திருக்கின்ற சில தனிப்பாடல்களிலும், பாலி மொழி இலக்கியங்கள் சிலவற்றிலும் கூட இக்கருத்து தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன. சில இடங்களில் கிடைத்த 3ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் சிலவற்றிலும் சில தகவல்கள் களப்பிரர் பற்றிய சான்றுகளைக் கூறுவதாக அமைந்திருந்தாலும் பூலாங்குறிச்சியில் கிடைத்த ஒரு கல்வெட்டு மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டிருக்கின்றது என்று கூறலாம்.

இவை மட்டுமன்றி களப்பிரர்கள் எங்கிருந்து வந்தனர். சில மன்னர்களின் பெயர் என பல்வேறு தகவல்களை விளக்குகின்றார் டாக்டர் பத்மாவதி.

பகுதி 2
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கள ஆய்வில் பௌத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்பான ஆய்வுகள் களப்பிரர் இப்பகுதியில் ஆட்சி செய்தமயைக் குறிப்பனவாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் களப்பிரர் ஆட்சி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மதுரையில் பல உறுதியான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இன்றைய கடலூர் என்று குறிப்பிடப்படும் பாடலிபுரம் பகுதியிலும் பல சமண கடிகைகள் இருந்திருக்கின்றன. காஞ்சிபுரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் இருந்திருக்கின்றன. களப்பிரர்கள் பௌத்தத்தையே பின்பற்றியவர்களாக இருந்திருந்திருக்கின்றனர். கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததால் பல ஆசிய நாடுகளில் பௌத்தம் பரவியது. இத்தகவல்கள் மட்டுமன்றி இதுவரை கிடைத்திருக்ககின்ற சான்றுகளிலிருந்து நமக்கு அறியக்கிடைக்கும் களப்பிற மன்னர்களின் பெயர்களையும் டாக்டர் பத்மாவதி இப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.

இப்பதிவுகளைக் காண மண்ணின் குரல் வலைப்பக்கம் செல்க. இதன் முழு தொடர்ச்சியும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே தொடர்ந்து இணைக்கப்பட்டு வெளியிடப்படும்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

காவல் கோட்டம் - சு.வெங்கடேஷ்



பத்தாண்டு கால கள ஆய்வு, நாட்டார் கதைகள், வாய்மொழி மரபு ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றினைக் கூறும் நாவல்...

மதுரை நகரின், மதுரை அரசின், தெந்தமிழகத்தின் 600 ஆண்டு கால வரலாற்றைக் கூறும் நாவல்...

இவ்வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் 3000க்கும் மேல் விற்பனை கண்ட நாவல்..

மாலிக்கபூர் படையெடுப்பிலிருந்து தொடங்கி மக்கள் வரலாற்றைக் கதையாக பின்னியிருக்கும் 1048 பக்கங்கள் கொண்ட 2011ம் ஆண்டின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற காவல் கோட்டம் நாவலின் ஆசிரியர் சு.வெங்கடேஷ்.. அவரை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்த போது தன் நாவலைப் பற்றி நம்முடன் தகவல் பகிர்ந்து கொள்கின்றார்.

பதிவினைக் கேட்க..!
ஒலிப்பதிவு: சுபா .

பாரதி மகா கவியா அல்லது தேசிய கவியா - நரசய்யா


சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் பதிவு இது.

பதிவு இங்கே!

Click here to view the MS Powerpoint presentation:
Part 1
Part 2


Summary of the talk:

In 1935 there was a wordy duel between two literary groups – one that of Manikkodi and the other that of Kalki Krishnamurthi of Anandavikatan. It all started with V Ramaswami Iyengar then editor of Veerakesari in Colombo and former editor of Manikodi, declaring that Subramania Bharati as a Great Poet, whereas the Kalki group felt that Bharati was a good national poet and not a Great poet.

The talk focuses on the letters and essays written by both the groups declaring their views. However, it must be noted that the debate, while generating a lot of heat and light, did not create any ill-feelings among the individuals. In fact, they all remained friends and respected each other!

The speaker, K R A Narasiah, biographer of Chitti Sundararajan – one of the important participants of the debate – has the original letters written by some of the stalwarts of that day and is now presenting the lot available with him to show the level of the debate and the important Dramatis Personae in their learned correspondence.

Profile:

Mr. K. R. A. Narasiah was born in Berhampur, Orissa, into a Telugu family. After completing his early education in Tamilnadu, he became a marine engineer and sailed in the naval vessels for ten years and, later, for three years in the merchant navy. During his naval time he was deputed to the Harland & Wolff Shipyard in Belfast, North Ireland, for standing by the construction of I N S Vikrant, Navy’s first aircraft carrier and took over as its Fight Deck Chief. He joined the port of Visakhapatnam in 1965 and retired in 1991 as its Chief Mechanical Engineer. While in Port Service his services were requisitioned by the Navy during the Bangladesh liberation war. Later he was invited by the World Bank as a consultant for the emergency rehabilitation in Cambodia. He was also a consultant to the Asian Development Bank.

Mr. Narasiah took to writing early in his life and has published more than 100 short stories in Tamil that have come out in four volumes. Four of his works have been given Tamil Nadu State Literary Awards. He writes in English as well. He is a regular reviewer of books for The Hindu.

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்

பிள்ளையார்பட்டி விநாயகர் பற்றியும் நகரத்தார் சமூக வரலாற்று பற்றியும் முனைவர் வள்ளி வழங்கும் விளக்கம்: ஒலிப்பதிவு - பகுதி 1

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி. இந்த சிற்றூர் காரைக்குடியிலிருந்து 12 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்னும் இச்சிற்றூரின் சிறப்புக்குக் காரணம் பிள்ளையார்பட்டி கோயில்.



இரண்டு பெரிய ராஜ கோபுரங்களுடன் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கோபுரங்களைத் தரிசித்தவாறு வரும் பக்தர்களை முதலில் வரவேற்பது கோயில் திருக்குளம். கோயிலின் வலது புறத்தில் நகரத்தார் விடுதி அமைந்திருக்கின்றது. இங்கே தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பிள்ளையார் பட்டி கோயிலில் அமைந்துள்ள பிள்ளையாருக்கான குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தது. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இக்குடைவரைக் கோயில் காண்போரை வியக்கவைக்கும் தன்மைக் கொண்டது. முன்னர் சிவனை ப்ரதானமாக வைத்துக் கட்டப்பட்ட கோயிலாக இருந்து பின்னர் பிள்ளையார் வழிபாடு பிரசித்தி பெற்று வளர்ந்திருக்கின்றது. இக்குடைவரைக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் திரூருவச் சிலை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஆறு அடி உயரம் கொண்டது இப்புடைப்புச் சிற்பம்.
படம்: நன்றி: http://www.visvacomplex.com/Valampuri_2.html

முன்னர் பிள்ளையார்பட்டியைச் சுற்றியுள்ள ஊரின் பெயர் மருதங்குடி என அழைக்கப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டு வாக்கில் பிற்கால பாண்டியர்களிடமிருந்து இங்கிருந்த நகரத்தார் சமூகத்தினர் இந்த மருதங்குடி என்னும் ஊரை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இச்செய்தியைக் குறிப்பிடும் சான்றாக ஒரு கல்வெட்டு இந்தக் கோயிலிலேயே செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனிடமிருந்து நகரத்தார் சமூகத்தினர் இந்தகரை வாங்கி இங்கிருக்கும் கோயிலையும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டுள்ளனர்.

பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் அமைந்துள்ள பிள்ளையார் புடைப்புச் சிற்பம் மிகப் பழமையான ஒரு பிள்ளையார் வடிவம் எனக் கொள்ளலாம். 5ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டச் சிலையாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றார் முனைவர்.வள்ளி. இக்குடைவரைக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு இக்கோயில் 5ம் நூற்றாண்டினதாக இருக்கும் சாத்தியத்தை உறுதி செய்வதாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலேயே மிகப்பழமையான பிள்ளையார் சிலையாக இந்தப் பிள்ளையார்பட்டி பிள்ளையார் சிலையைக் குறிப்பிடலாம்.

இந்த பிள்ளையார் சிலை இரண்டு கைகளுடன் இருப்பது போலவே அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பிரமாணடமான சிலை. குகையைக் குடைந்து கற்பாறைகளை வடித்து பிள்ளையார் உருவச் சிலையை வடித்திருக்கின்றனர் சிற்பிகள். இப்பிள்ளையார் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.







கோயில் தல விருட்சம் மருதமரம்





அன்புடன்



சுபா

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் - மக்கள் சிந்தனை இயக்கம்



சைவமும் தமிழும் வளர்க்கும் பணியோடு கல்விப்பணி, சமூகப்பணி, கிராமப்புற மேம்பாட்டுப் பணி, என்பதோடு கிராம மக்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சிகளையும் செய்து வருகின்றது குன்றக்குடி சைவத் திருமடம். அத்துடன் மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் என்ற இரண்டு தமிழ் மாத இதழ்களையும் வெளியிட்டு வருகின்றது. மக்கள் சிந்தனை, சமய நல்லினக்கம், அறிவியல் கல்விச் செய்திகள் போன்றவற்றையும் இவ்விதழ்களின் வழி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றது இம்மடம்.



மக்கள் கல்வி நிலையத்தோடு, வேளாண் அறிவியல் ஆய்வு நிலையம் ஒன்றை குன்றக்குடியில் மையமாக அமைத்து விவசாயம் கால்நடை ஆகியவற்றிற்காண ஆய்வுக் கூடமாக இந்தப் பகுதி மக்களின் தேவைக்காக ஏற்படுத்தி நடத்தி வருகின்றது. பத்து ஆய்வுப் பேராசிரியர்களைக் கொண்டு இந்த வேளாண் ஆய்வு மையம் இயங்கி வருகின்றது். அதோடு குன்றக்குடியிலேயே தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றினை அமைத்து இங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியும் வழங்கி வருகின்றது குன்றக்குடி சைவத் திருமடம்.

பெண்களின் கல்வி மேம்பாட்டை மனதில் கொண்டு சாதாரண அடித்தளத்து பெண்களும் கல்வியில் உயர கல்வியியல் கல்லூரி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகின்றது இத்திருமடம். பாபனாசத்திலும் மகளிருக்கான தமிழ் மற்றும் நவீன தொழில் நுட்பக்கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது. இதன் வழி வறுமையில் வாடும் பெண்கள் கல்வி பெற்று தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள இவ்வமைப்பு உதவி வருகின்றது.

இது மட்டுமல்ல.. இன்னும் பல சேவைகள். ஆதீனகர்த்தர் பொன்னம்பல சுவாமிகள் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய சிறப்பு பேட்டியில் இத்திருமடத்தின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கின்றார். கேட்டுப் பாருங்களேன்..!

பதிவு 1

முதல் பகுதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


த.ம.அ பேட்டிக்காக ஆதீனகர்த்தரைக் காணச் சென்றவர்கள்: முனைவர் வள்ளி, முனைவர்.காளைராசன், முனைவர் நா.கண்ணன், சுபா 

தண்டோரா



தமிழக கிராமங்களில் இன்றும் தகவல் பரிமாற்றத்திற்கு தண்டோரா பயன்படுத்துகின்றனர் என்பதை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. புரிசையில் தெருக்கூத்து பற்றிய பதிவுகளைச் செய்து முடித்து திரும்பும் போது ஊர் மக்களுக்கு ஒரு கோயில் திருவிழா தொடர்பான செய்தி சொல்வதற்காக ஒரு தண்டோராக்காரர் வந்திருந்தார். அவரது தண்டோராவை பதிவு செய்திருக்கிறேன். இங்கே கேட்டுப் பாருங்களேன்!



அன்புடன்

சுபா

பத்துப்பாட்டு முற்றோதல் - பகுதி 1, 2, 3

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் வாசகர்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இன்றைய நாளை சிறப்பிக்க இரண்டு அங்கங்கள் இடம் பெறுகின்றன. அவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள பத்துப்பாட்டு முற்றோதல் ஒலிப்பதிவுகள். பாகம்1, 2 , 3 ஆகியவை. (இவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அனுமதி பெற்று தயாரித்து இங்கு இணைக்கப்படுகின்றது)

அடுத்து இடம் பெறுவது ஒரு பேட்டியின் விழியப்பதிவு (2 பகுதிகள்)

1.பத்துப்பாட்டு முற்றோதல் ( நன்றி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் )

பாகம் 1
அ. திருமுருகாற்றுப்படை

முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா

ஆ.பெருநாராற்றுப்படை
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்


பாகம் 2
அ.சிறுபாணாற்றுப்படை

முற்றோதுபவர்கள்:
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்

ஆ.பெறும்பாணாற்றுப்படை
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா


பாகம் 3
அ.முல்லைப்பாட்டு

முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்


ஆ.மதுரைக்காஞ்சி
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
திரு.மா.கோடிலிங்கம்

அன்புடன்
சுபா

சாஸ்தா சரித்திரக் கும்மி

வணக்கம் மின்தமிழ் நண்பர்களே.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இம்மாத மண்ணின் குரல் இன்று மலர்கின்றது.!

இம்மாதப் பதிவைச் சிறப்பிப்பது சாஸ்தா சரித்திரக் கும்மி.

இந்த நூலில் 20 பாகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக கிராமிய கும்மி இசை வடிவத்தில் நமக்காக பாடி பதிவு செய்து அனுப்பியிருக்கின்றார் திருநெல்வேலியைச் சேர்ந்த திருமதி.ஜெயலட்சுமி அவர்கள்.

இவர்களுக்கும் இவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜடாயு அவர்களுக்கும் நம் நன்றி.
பதிவைக் கேட்க :
படிவு 1
பதிவு 2
பதிவு 3

இவ்வொலிப்பதிவுகளைக் கேட்டு அவை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஐயனார் வழிபாடு




தமிழகமெங்குமன்றி தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கூட ஐயனார் வழிபாடு என்பது சிறப்புற்று வழக்கில் இருந்து வருகின்றது. இத் தெய்வத்தை பற்றி விளக்கும் ஒரு பேட்டி ஒலிப்பதிவே இன்றைய வெளியீட்டில் முதல் அங்கமாக வெளிவருகின்றது.

மலை வளம், ஆற்று வளம் நிறைந்த இடங்களிலும் கிராமப்புறங்களிலும் இத்தெய்வ வழிபாடு மிகப் பரவலாக இருந்து வருகின்றது. வீர வழிபாட்டை பிரதிபலிப்பதாகவும் ஐயனார் வழிபாடு வழக்கில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் வீரர்கள் பற்றிய செய்திகள் உள்ளன். ஐயனார் ஐயனாரப்பன் என்றும் அழைக்கப்படுவது வழக்கில் உள்ளது. கல்வெட்டுக்களில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்த ஆலயங்களில் ஐயனார் வழிபாடு சாஸ்தா என்று குறிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் சாஸ்தா ஆலயம் இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒன்று.

பண்டைய காலத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் முக்கிய இடம் பெற்றிருந்த தேவேந்திரன் வழிபாடு ஐயனார் வழிபாடாக மாற்றம் கொண்டதா? ஐயனாரின் தோற்றம் என்ன? இவற்றையெல்லாம் விவரிக்கின்றார் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி.

ஐயனார் வழிபாடு!


பதிவு: மார்ச் 2011
பதிவு செய்தவர்: சுபா 

புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி கொ.மா.கோதாண்டம்

வணக்கம்.


தமிழ் இலக்கிய உலகத்துக்கு நன்கு அறிமுகமானவர் இராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள். மு.கு.ஜகந்நாதராஜா அவர்களைப் பற்றி அவரது நெருங்கிய நண்பரும் அவருக்குப் பின்னர் மணிமேகலை கலைமன்றத்தைத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வருபவருமான டாக்டர்.கொ..கோதண்டம் அவர்கள் வழங்கும் ஒரு சிறப்புப் பேட்டியைத் தாங்கி இம்மாத மண்ணின் குரல் ஒலிப்பதிவு இதழ் இப்பகுதியில்வெளிவருகின்றது.




குறிஞ்சிச் செல்வர் என்று சிறப்பித்து அழைக்கப்படும் டாக்டர். கொ.மா.கோதாண்டம் அவர்கள் தமிழில் குறிஞ்சி நிலம் பற்றியும், குறிப்பாக வன இயல், தாவரவியல், விலங்கியல் போன்ற துறைகளில் இலக்கியம் படைத்துள்ளவர். இதுவரை ஏறக்குரை 90 நூல்கள் இவரது படைப்புக்களாக வெளிவந்துள்ளன. புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்து ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி எழுதிய கட்டுரை ஒன்று தினமணியில் வெளிவந்துள்ளது. அதன் பதிவை நமது வலைப்பக்கத்தில் இங்கே காணலாம்.

இந்தப் பிரத்தியேக பேட்டியில் நமக்காக புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி தனது கருத்துக்களைப் இவர் பகிர்ந்து கொள்கின்றார்.

இம்மாத மண்ணின் குரல் வெளியீட்டில் இப்பேட்டி ஒலிப்பதிவின் இரண்டு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பதிவு கோப்புக்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 10 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.


பகுதி 1.

இப்பகுதியில் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் இலக்கியப் பணிகளை விவரிக்கின்றார் கொ.மா.கோதாண்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் வரலாற்றை தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் எழுதினார். கடின தெலுங்கில் அமைந்த அந்த நூலை புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். இந்த நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூலுக்க்கான சாகித்ய அக்காடமி பரிசு பெற்ற முதல் நூல் என்ற பெருமை பெற்றது என்றும் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா புறநானூறு முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களை தெலுங்கில் மொழி பெயர்த்தமை பற்றியும் விவரிக்கின்றார்.

பகுதி 2.

பூதலப்பட்டு ஸ்ரீ ராம ரெட்டி என்பவர் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை பெரியபுராணம் போன்ற தமிழ் காவியங்களை மொழிபெயர்த்திருக்கின்றார். அதற்குப் பிறகு யாரும் தமிழ் இலக்கியங்களை தெலுங்கில் மொழிபெயர்க்காத நிலையில் இவர் புறநானூற்றை தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பாலி மொழியறிவும் கொண்டிருந்தமையால் சில சமண பௌத்த நூல்களையும் தமிழிற்கு மொழி பெயர்த்துள்ளார்.

புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் இல்லத்தில் உள்ள ஜகந்நாதராஜா நூலகத்தில் அவரது அனைத்து நூல்களும், கையெழுத்துப் பிரதிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இப்பேட்டியில் இந்த நூலகத்தைப் பற்றியும் டாக்டர். கொ.மா.கோதாண்டம் விவரிக்கின்றார்.

மணிமேகலை காப்பியத்தில் அளப்பற்ற ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் புலவர் மு.கு.ஜகந்நாதரா அவர்கள் 1958-ஆம் ஆண்டில் ராஜபாளையத்தில் மணிமேகலை கலைமன்றத்தை உருவாக்கியிருக்கின்றார். இவரோடு டாக்டர். கொ.மா.கோதாண்டம் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து இக்கலைமன்றத்தின் வழியாக பல இளைஞர்களைப் பல்லாண்டுகளாக இலக்கியத்தில் ஈடுபட ஊக்கமளித்து வளர்த்து வந்திருக்கின்றனர். மணிமேகலை கலைமன்றத்தின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவற்றை தற்போது தலமைப் பொறுப்பில் இருந்து பல இலக்கியப் பணிகளைச் செய்து வருபவர் டாக்டர். கொ.மா.கோதாண்டம் அவர்கள்.

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைன் மண்ணின் குரலில் கேட்டு மகிழலாம்.

இப்பேட்டி கடந்த மார்ச் மாதம் நான் தமிழகத்திற்குச் சென்றிருந்த சமையம் நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்பேட்டியின் ஏனைய பகுதிகள் அடுத்தடுத்த மாத மண்ணின் குரலில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த பேட்டிக்கான ஏற்பாட்டில் உதவியவர்கள்: திருமதி.சீதாலஷ்மி, திருமதி.மதுமிதா மற்றும் அவர் கணவர், திரு.எஸ்.ராமச்சந்திரன், திரு.ரகுபதிராஜா ஆகியோர். அவர்களுக்கும் என்னுடன் துணையாக ராஜபாளையம் வந்திருந்து இவ்வொலிப்பதிவில் பங்கு கொண்ட திரு.திருமதி துரை அவர்களுக்கும் எனது நன்றி.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

இசக்கி அம்மன்

இசக்கி அம்மன் - விளக்கத்தை வழங்குபவர் டாக்டர்.பத்மாவதி: தமிழ் நாடு தொலியல் துறை

இரண்டு ஒலிப்பதிவுகள் உள்ளன.

அ. தமிழக கிராமப்புரங்களில் மக்களால் நம்பிக்கையுடன் வழிபடப்படும் தெய்வம் இசக்கி அம்மன். இந்த தெய்வத்தின் தன்மைகளை, எவ்வாறு இந்தத் தெய்வ வழிபாடு தமிழக மக்களின் வழிபாட்டு முறைகளில் கலந்தது என்பதை விளக்கும் ஒலிப்பதிவு முதலாவதாக இடம்பெறுகின்றது.

ஆ. அடுத்து, சமண சமயக் கதைகளைக் கூறும் ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்படும் யட்சியாம்பிகா, இசக்கி அம்மன் எனப்படும் தெய்வத்துடன் உள்ள தொடர்பினை இரண்டாவது ஒலிப்பதிவு விளக்குகின்றது.

இப்பேட்டிகளைக் கேட்கவும் இசக்கி அம்மன் கோயில் படங்களைக் காணவும் இங்கே செல்க!

இல்லத்து பிள்ளைமார் சமூகத்தினரும் நெசவுத் தொழில் தொடர்பான செய்திகளும்



தென் தமிழகத்தில் இல்லத்து பிள்ளைமார் என குறிப்பிடப்படும் குழுவினர் முன்னர் ஈழவர்கள் அல்லது நெசவு பணிக்கர்கள் என அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்சமயம் இச்சமூகத்தினர் நெசவுத் தொழிலில் ஈடுபடுவது குறைந்து விட்டது என்ற போதிலும் முன்னர் இவர்கள் சாணார்கள் (நாடார்கள்) எனப்படும் ஒரு சமூகத்தினருக்கு நெசவுத் தொழில் பணியில் ஈடுபட்டவர்களாக இருந்ததாக வரலாற்று, தொல்லியல் ஆய்வறிஞர் திரு.எஸ். ராமச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் இக்குழுவினர் சாணார் எனப்படும் (நாடார்கள்) சமூகத்தைச் சார்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பதற்கான சான்றுகள் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆவணங்களை ஆராயும் போது கிடைக்கப்பட்ட தகவலையும் குறிப்பிடுகின்றார்.

கான் சாஹீப் ஒரு இல்லத்துப் பிள்ளையார் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும்; கான் சாஹீப்பிற்கும் சாணார்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் எங்கே பிறந்தவர் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.

இவ்வொலிப்பதிவில் இறுதியாக நாலாட்டின் புதூர் பற்றிய சிறு தகவலும் வருகின்றது.

-பேட்டி !

கண்ணனின் கவிதை - அண்டகோளம்


நா.கண்ணன்


அண்டகோளம்..!

திருக்குறள் உரைகள் - நாகநந்தி (2)

திருக்குறள் உரைகள் - வழங்குபவர் மறைந்த பேராசிரியர் டி.வேணுகோபால் (நாகநந்தி)

இவ்வொலிப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காகச் சேகரித்து வழங்கியவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள்.

ஆனந்தம்.. ஆனந்தம்.. ஆனந்தமே!


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


ஆனந்தம்.. ஆனந்தம்.. ஆனந்தமே!

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness